Friday, January 30, 2009

நம் காதல்

கண்மணி..
இனி நீ சூடும் பூக்களெல்லாம்
பூக்களாக இருக்காது..
அது என் காதலாகத்தான் இருக்கும்..
ஆம்.. உலகத்தில் உள்ள
அத்தனை பூக்களிலும்
என் காதலை நிரப்பி வைக்க போகிறேன் ..
என்றேனும் நீ பூக்கள் சூட..
என் காதலோடு என் நெஞ்சமும்
நிறைந்து போகும்.
............................................
நமக்கான உலகத்தில்
உன்னை மட்டும்
வெளியே அனுப்பிவிட்டு
இருந்த ஒரு
வழியையும் இறுக
அடைத்துக்கொண்டு விட்டது
நம் காதல்..
இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..
உன் நினைவுகளின்
தூரலோடும் . .
வாழ்வதை தவிர
வேறென்ன செய்ய முடியும் நான்.
.....................................

Friday, January 23, 2009

வாங்க விளையாடலாம்







yaru

யாரு எவ்ளவு ஸ்கோர் எடுத்ததுன்னு கமெண்ட்ல போட்டு போங்க ஓகே

அந்த தாத்தா யாரு தெர்யுமா

Wednesday, January 14, 2009

பட பட பட்டாம்பூச்சி

பட பட பட்டாம்பூச்சி எனக்கு இந்த அவர்ட்கொடுத்த நல்லவரு வள்ளவரு நாளும் தெரிஞ்சவரு நம்ப m s k - தனியே பறக்கும் பறவை..
எனக்கு இந்த அவர்ட் கொடுத்த சரவணகுமார்குஎன் கோடன கோடி நன்றிகள் .
இன்னைகு காலைல எழுந்துக்கும் போதே என்னடா இன்னைகும் ஆபீஸ்கு போகனுமானு ஒரு கவலையோட எழுந்து . அதே கவலையோட வாசல்ல ஒரு சின்ன கோலம் போட்டு அதுக்கு நிறைய கலர் அடிச்சி அப்படாஒரு வேலை முடிஞ்சதுனு நான் வீட்டுள்ள போக .என்ன விட இந்த கோலம் ரொம்ப அழாக இருக்கேனு பொறாமைல பொங்கி வந்த மழை அத கலைக்க . நான் அத பாத்து கடுப்பாக .என்ன பாத்து எங்க அம்மா கடுப்பாக .அடடா இனிமே இங்க இருந்த வேலைக்கு ஆகாதுன்னு .நான் கிளம்பி ஆபீஸ் வர .டெய்லி செய்யறோமே (நெஜமா நம்புக பா) இன்னைக்கு காலைல கொன்சம்p பிரியா அப்படியே ப்லோக் பக்கம் போய்வரலமேனுt சரவணகுமார் ப்லோக் பக்கமா போய் அவரு என்னதான் எழுதி இருக்காருன்னு படிசிடே வரும்போது என் பெயர் அங்க வர .அட நம்பல இருக்காதுன்னு நெனச்சிட்டு இருந்தாலும் பரவால்லனு அந்த ப்லோக் ஓபன் பண்ணி பாத்தா எனக்கு தான் அவர்ட் கொடுத்து இருக்காரு . அத பாத்ததும் என்னக்கு ரொம்ப சந்தோசம் ஆய்டிச்சி .மறு ஒரு முறை saravanakumarku en நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

ஓகே ஓகே உங்கள எல்லாம் ரொம்ப மொக்க போட்டேன்னு நினைக்கிறேன் .

நான் பெற்ற இன்பம் என் வலை உலக nanparkalum kanattum
நான் அழைக்கும் இருவர் லோகநாதன் மற்றும் ஆயில்யன்

விதிமுறைக‌ள் மிக‌ எளிமையான‌வை. நாம் ர‌சிக்கும் ப‌திவ‌ர்க‌ளுக்கு ப‌கிர‌வேண்டும். விருதை வ‌லைப்பூவில் இட‌வேண்டும். கொடுத்த‌வ‌ர், கொடுக்க‌ப்ப‌டுப‌வ‌ர் அனைவ‌ருக்கும் இணைப்புக‌ள் த‌ர‌வேண்டும். பின்னூட்ட‌ அறிவிப்புகள் செய்ய‌ வேண்டும்

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

.



Monday, January 5, 2009

மௌன மொழி

எத்தனையோ நாட்கள்
கழித்து உன்னிடம்
எதை எதையோ
பேச வந்த உதடுகள்
உன்னை பார்த்ததும்
மௌனம் பழக
ஆரம்பித்து விட்டது..
நாள் முழுக்க பேசினாலும்
அர்த்த படாமல் பார்த்து
கொண்டு இருப்பதே
இதம் என்று அதற்கும்
தெரிந்து விட்டது போல ..
இமையும் எனக்கு சுமையே
உன்னை காணும்
போது இமைப்பதால் ..