Thursday, December 31, 2009

நினைவெல்லாம் நீயே

தான் துணையோடு சேர்ந்து இருக்கும் அந்த ஒரு நொடிக்காக வேக வேகமாக இரவு 12 மணியை நெருங்கி கொண்டிருக்கிறது கடிகார முள். கடிகாரம் 12 மணியை நெருங்க நெருங்க வினிதாவிற்கு ஏதோ நெஞ்சில் ஒரு படபடப்பு . கடிகார முள்ளைவிட மிக வேகமாக துடித்து கொண்டிருந்தது அவள் இதயம் .தன் கைபேசியை எடுத்து கொண்டு இரவு 11 .30 .௦ ௦ மணிக்கு தன் வீட்டின் மொட்டை மாடிக்கு செல்கிறாள் .இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கிறது இன்று முடிந்து நாளை புதிய நாள் பிறக்க போகிறது .புதிய நாள் புதிய நாளுக்கு மட்டும் இல்லை அவளுக்கும் தான்..ஏனோ அன்று மட்டும் நிலா யாருக்காகவோ காத்து கொண்டு இருப்பது போலவும் , விண்மீன்கள் எல்லாம் கையில் பூவுடன் அவளை பார்த்து சிரிப்பதை போலவும் உணர்ந்தாள். லேசாக கண்களை மூடி தன் கடந்த காலத்திற்கு சென்றாள்.
ஹே வினிதா இந்த சில்லென்ற பனிகாற்றில் உன் கூட கை பிடிச்சிட்டு இந்த அலையை ரசிக்க எவ்ளவு சந்தோசமா இருக்கு தெரியுமாடி . என் காலம் முழுவதும் இதே மாதிரி உன் கை பிடிச்சிட்டு இங்கயே இருக்க சொன்னா கூட இருப்பேன்.என்னமா வந்ததுல இருந்து நானே பேசிட்டு இருக்கேன் நீ எதுவும் பேசாம இருக்க ஏன் ஒரு மாதிரி இருக்க என்னாச்சி ?.
நிஜமா காலம் பூரா என் கூடவே இருக்கணும்னு ஆசைய
ஏன்மா இப்படி சந்தேகத்தோட கேக்குர பின்ன என்னடா 5 .30௦ கு வர சொன்னா 6 .30 க்கு வந்து இருக்க . உன் மொபைல்க்கு கால் பண்ணாலும் சுவிட்ச் ஆப்னு வருது . என்ன சாமதானம் பண்றதுக்கு காலம் பூரா என் கூட இருகண்ணும் அப்படி இப்படின்னு கதவிடற அப்படி தானே என்று கண்களில் நீருடன் அவனை பார்க்கிறாள் .
ஹே என்னடி லூசு மாதிரி பேசுற என்னாச்சி உனக்கு இன்னைக்கு . நீ எப்பவும் இப்படி என் கூட பேசினது இல்லையே என்னே ப்ரோப்ளம்மா உனக்கு ?
எனக்கு பயமா இருக்கு சிம்பு நீயும் நானும் சேராம போயிடுவோமோனு.

என்னைக்கும் இல்லாம இன்னைக்கு மட்டும் என்ன பயம் உனக்கு .
இது வரைக்கும் எங்க வீட்ல கல்யாண பேச்சை எடுக்கல . ஆனா அம்மா இப்ப எனக்கு கல்யாணம் பண்ணியே ஆகனும்னு முடிவா இருக்காங்க .

சரி நீ என்ன முடிவு பண்ணி இருக்க
இதுலநான் முடிவு பண்ண என்ன இருக்கு . நம்ப காதல பத்தி நான் வீட்ல சொல்லிட்டேன் . எனக்கு வேற வழி தெரியல .
சரி வீட்ல என்ன சொன்னாங்க ?
என்ன கட்டி புடிச்சி முத்தம் கொடுத்து சரிடி செல்லம் நீ லவ் பண்ணுனு சொன்னாங்க .என்ன விளயாடுரியா நான் எவ்வளவு பெரிய விசயம் சொல்லிட்டு இருக்கேன் . நீ கொஞ்சம் கூட டென்ஷன் இல்லாம கூலா கேள்வி கேட்டுட்டு இருக்க .
வேற என்ன பண்ண சொல்ற உன்னைய எங்கயாச்சி கூப்பிட்டு ஓட சொல்றியா அதெல்லாம் என்னால முடியாது .
என்னைய கூப்பிட்டு ஓடணும்னு ஒன்னும் சொல்லல . உங்க அம்மா, அப்பாவ கூப்பிட்டு வந்து எங்க விட்ல பேசுன்னு தான் சொல்லுறேன் . வர வெள்ளிகிழமை நீ வந்து எங்க வீட்ல பேசுவேன்னு நான் அப்பா கிட்ட சொல்லி இருக்கேன் .நீ இல்லாம என்னால இருக்க முடியாது சிம்பு .

இந்த சினிமா டைலாக்க எல்லாம் என் கிட்ட பேசாத. ஏதோ பேசணும்னு தோனிச்சி பேசினேன் . லவ் பண்ணனும்னு தோனிச்சி லவ் பண்ணேன் அவ்வளவு தான் .; இப்ப கல்யாணம் பண்ணனும்னு தோனல சோ கல்யாணம் பண்ண முடியாது .உங்க வீட்ல பாக்குற பையன கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு ஓகே . நான் வரேன் சாரி நான்
போறேன்உன்னைய போய் லவ் பண்ணேன் பாரு அதுக்கு நான் இந்த கடல்ல குதிச்சி தற்கொலை பண்ணிக்கிறேன் போடா போ
ஏய் போடி …….
அண்ணா கடலை வாங்கிகோங்க அண்ணா , 5 ரூபாய் தான் வாங்கிகோங்க அண்ணா .
எனக்கு வேண்டாம்டா நானே இத்தன நாள் கடலை போட்டுட்டு இருந்த பிகர விட்டுட்டு போறேன், என் கிட்ட வந்து கடலை வாங்கிகோனு சொல்ற எனக்கு வேண்டாம் போடா .
அண்ணா அங்க பாருங்க உங்க கூட பேசிட்டு இருந்த அக்கா தண்ணிகுள்ள போறாங்க
ஏய் என்னடா சொல்ற ஆமா அண்ணா அங்க பாருங்க .
ஏய்வினிதா போவாதடி நில்லு சொன்னா கேளு போவாதடி நில்லு ,நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் வாடி ,
இல்ல நீ போய் சொல்லற .லூசு வா வந்து உக்காரு பேசலாம்
ம்ம்
லுசாடி நீ . உன்னைய பிடிக்காம தான் 2 வருசமா உன்ன லவ் பண்ணிட்டு , 24 மணி நேரமும் போன்ல பேசிட்டு , காலைல இருந்து நைட் வரைக்கும் என்னக்கு என்ன என்ன நடக்குதுன்னு . உன் கிட்ட சொல்லிட்டு , என் சந்தோசம் துக்கம் எல்லாம் உன்கிட்ட ஷேர் பண்ணிட்டு இருக்கேன் இதெல்லாம் யோசிக்கவே மாட்டியா நீ .
இப்ப இவ்வளவு பேசுற அப்ப மட்டும் ஏன் அப்படி பேசின
சரி வெள்ளிகிழமை வீட்டுக்கு வர சொன்னய்யே . சொல்லாம கொள்ளாம போய் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு இருந்தேன்சரிடி வெள்ளிகிழமை முதல்ல நான் மட்டும் வந்து உங்க அம்மா அப்பா கிட்ட பேசுறேன். அவங்களுக்கு என்னைய புடிச்சி கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டா நான் மறுபடியும் அம்மா அப்பா கூட வந்து பேசுறேன் சரியா.சரி நான் ஒன்னு சொல்றேன் கேளு . நான் ஏற்கனவே சொன்ன மாதிரி US போற விஷயமா பாஸ்போர்ட் எல்லாம் ரெடி ஆகிடிச்சி . ஜனவரி லாஸ்ட் போனாலும் போவேன் . அதுக்குள்ள உங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டு ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிட்டு அங்கேயே போய்டலாம் என்ன சரியா
.ம்ம் சரி போடா லூசு கொஞ்ச நேரத்துல என்ன எப்படி பயமுறுத்திட்ட.

காதல்ல இதெல்லாம் சகஜமடி என் செல்லமா ........
சரி சரி வீட்டுக்கு கிளம்பு நேரம் ஆகிடிச்சி அம்மா அப்பா கிட்ட சொல்லு நான் வெள்ளிகிழமை வரேன்னு . வா நானே உன்ன உங்க வீட்டு பக்கத்துல டிராப் பண்ணிட்டு போறேன் .
இல்ல வேண்டாம் நானே வீட்டுக்கு போறேன் .இப்பவே ட்ராபிக் அதிகமா இருக்கும் நீ இப்ப கிளம்பினா தான் வீட்டுக்கு சிக்கிரம் போக முடியும் .
சரிங்க மேடம் நான் கிளம்புறேன் நீங்க விட்டுக்கு போய்ட்டு கால்
பண்ணுங்க
என்னமா வினிதா அந்த தம்பிய பார்த்தியா பேசினியா என்ன சொன்னாரு.
வர வெள்ளிகிழமை வீட்டுக்கு வந்து உங்க கிட்ட பேசுறேன்னு சொல்லியிருக்காருங்க அப்பா.
அப்படியா, சரிமா நீ போய் சாப்ட்டு தூங்கு
சரிங்க அப்பா .
என்னங்க அவ தான் எதோ பேசுறானா நீங்களும் அவகூட சேர்ந்து பேசிட்டு இருக்கீங்க . அந்த பையன் யாரு என்ன, ஜாதி , மதம்னு தெரியாம வர சொல்லிடீங்க . அவனுக்கு எப்படி நம்ப பொண்ண கொடுக்கறது .

என்னமா சொல்றிங்க நீங்க என்ன கடைசி வரைக்கும் சந்தோசமா வச்சிட்டு இருக்க போறது அவன் என் மேல வச்சிட்டு இருக்க அன்பு காதல் மட்டும் தான் நீங்க சொல்ற ஜாதி, மதம் இல்லநீங்க மட்டும் சொல்றிங்களா அந்த பையன பத்தி எதுவும் தெரியாம எப்படி நம்ப பொண்ண கொடுக்குர்துன்னு . நீங்க பாக்குற பையன பத்தி எதுவுமே தெரியாம நான் மட்டும் எப்படி கல்யாணம் பண்ணிப்பேன்.
உனக்கு வாய் ரொம்ப அதிகமாய்டிச்சிடி . கூட கூட பேசிட்டு இருந்த அறைஞ்சிடுவேன் .
இப்ப ஏன் நீங்க ரெண்டு பேரும் சண்ட போடறிங்க அந்த தம்பி வர வரைக்கும் இனி இத பத்தி யாரும் பேசாதீங்க போய் தூங்குக போங்க.
வெள்ளிகிழமை காலை 7 மணிக்கு வினிதாவின் அலைபேசி சிணுங்குகிறது .ஹெலோ வினிதா நான் சிம்பு பேசுறேன் .
என்னடா இந்த டைம்க்கு கால் பண்ணி இருக்க என்ன?
நான் எவ்வளவு டென்ஷனா இருக்கேன் நீ இவ்வளவு கூல இருக்க .
நீ தானடா சொல்லி இருக்க எப்பவும் டென்சன இருக்க கூடாதுன்னு சொன்ன அதான் .
போடி லூசு உங்க அப்பா என்ன சொல்லுவரோன்னு பயமா இருக்குடி .
நீ பயபடாதடா என் செல்லாத யாருக்கு தான் புடிக்காது . நான் வெளில வந்து நிக்குறேன் நீ வா ஓகே .
ம்ம் வா
வா ராசா வா இதான் எங்க வசந்த மாளிகை நல்லா பாத்துக்க.
நாய் எதுவும் இல்லலடி உங்க வீட்ல .
இல்லப்பா தைரியமா வரலாம் வா .
அதானே பாத்தேன் அப்படியே இருந்து இருந்தாலும் உன் தொல்ல தாங்க முடியாம வீட்ட விட்டே வெளில ஓடி போய் இருக்கும் .
ஏய் சும்மா இருடா உள்ள வந்து அடக்க ஒடக்கமான பையனா இருக்கனும் என்ன சரியாசரிங்க மேடம் போங்க .
அப்பா , இவங்க தான் சிம்பு, சிலம்பரசன்
வாங்க தம்பி உக்காருங்க
நன்றிங்க சார்
வினிதா அம்மா கிட்ட சொல்லி காபி போட்டு எடுத்துட்டு வாமா.
ம்ம் சரிங்க அப்பா
,அம்மா......, அப்பா உங்கள கூப்டாரு நீங்க போங்க நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்
ம்ம் சரிவா
சொல்லுங்க தம்பி உங்கள பத்தியும் உங்க குடும்பத்த பத்தியும்.
நான் அம்மா , அப்பா ஒரு தங்கச்சி மட்டும் தாங்க சார் , தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடிச்சி.எனக்கு உங்க பொண்ண ரொம்ப புடிச்சி இருக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை பட்றேன்.நீங்க சரின்னு சொன்னிங்கனா நான் ஜனவரி 27 u .s போறேன் . அதுக்குள்ளே கல்யாணம் முடிச்சிட்டு உங்க பொன்னையும் என் கூட கூப்பிட்டு போயடுவேன் சார்
சரிபா என் பொண்ண புடிச்சி இருக்குனு சொல்ற காதலிக்கிறேன்னு சொல்லற நீ என் பொண்ண எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு எனக்கு தெரியனும் .
சொல்லுங்க சார் நான் என்ன செஞ்சா நீங்க நம்புவீங்க ?
எத்தன வருஷம் என் பொண்ண தெரியும் உங்களுக்கு
2 வருஷமா தெரியும் சார்
சரிபா எனக்கு என் பொண்ணு சந்தோசம் தான் முக்கியம் அதுக்க நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன் .உங்களோட காதல் உண்மையானதா இருந்தா நானே உங்கள சேத்து வைக்கிறேன் .நீங்க லவ் பண்ண இந்த ரெண்டு வருஷத்துல தினமும் பேசி இருப்பீங்க . வாரத்துக்கு 2 முறையாவது பாத்து இருப்பீங்க .இதனால சண்டை வந்தாலும் சாமதானாமா போய் இருப்பீங்க .உங்க காதல் உண்மையனதுனா நீ u .s போய்ட்டு வர வரைக்கும் என் பொண்ணு கூட பேச கூடாது , பாக்க கூடாது. நீ இங்க இருந்து போகும் போது எப்படி என் பொண்ண நெனச்சிட்டு போறியோ அதே மாதிரி வரும் போதும் அவளையே நெனச்சிட்டு வந்தா நானே என் பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் .
சரிங்க சார் உங்க பொண்ணுகிட்ட 5 நிமிஷம் தனியா பேசணும் உங்க விருப்பத்தோட
ம்ம்ம்ம் சரிபா பேசிட்டு வா
.என்ன வினிதா உங்க அப்பா பேசினத எல்லாம் கேட்டல இப்ப என்ன பண்ண சொல்ற.
எனக்கு என் மேலும் உன் காதல் மேலும் நம்பிக்கை இருக்கு சிம்பு .
சரி வினிதா தினமும் பாத்து , தினமும் பேசுறது தான் காதல்னு நெனச்சிட்டு இருக்காரு உங்க அப்பா. அதையும் மீறி என் காதல் புனிதமானதுன்னு அவருக்கு புரிய வைக்கிறேன் நான் .இன்னிக்கு உன் கூட பேசறது தான் கடைசி வினிதா .இதோட நான் u .s போய்ட்டு வந்து தான உன் கூட பேசுவேன் . நீ இன்னைக்கே உன் மொபைல் நம்பர் மாத்திடு நானும் மாத்திடுவேன்நான் இந்தியாக்கு 2010 தான் வருவேன் .நான் வர அன்னிக்கே நம்ப நிச்சய தார்த்தம் வச்சிக்கலாம் ஓகே .
சரி சிம்பு என்னனே தெரியல மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அழுக அழுகையா வருதுடா .
ஏய் செல்லமா அழாதடி 3 வருஷம் தானே . நீ என்ன பண்ணுவியாம் 2010 புது வருஷ அன்னைக்கு நைட் உன் பழைய சிம் கார்டு உன் செல்ல போட்டு வைப்பியாம் . அந்த வருஷம் நான் தான் உனக்கு முதல் கால் பண்ணி விஷ் பண்ணுவேனாம் அன்னிக்கே நான் சென்னை வந்து எங்க அம்மா அப்பாவ உங்க வீட்டுக்கு கூப்பிட்டு வந்து பேசி என் ராசாத்திய நான் எனக்கு சொந்தமாகிட்டு போய்டுவேன் என்ன ஓகே வா
ம்ம் சரிடா நீ எப்பவும் என்னைய மட்டும் தான் நெனச்சிட்டு இருக்கனும்

ம்ம் சரிடி செல்லம் உன்னைய நினைக்காம வேற யார நினைக்க போறேன்
வா போகலாம் .
சார் நீங்க சொன்னது எனக்கு சம்மதம் 2007 இந்த வருஷம் u .s போறேன் 2010 எப்ப வேணும்னாலும் சென்னை வருவேன் . அப்ப எங்க அம்மாவும் , அப்பவும் கூப்பிட்டு வந்து பொண்ணு கேக்குறேன் .இந்நிலை இருந்து உங்க பொண்ணு கூட நான் பேச மாட்டேன் சரிங்களா சார்
சரிபா ஆல் தே பெஸ்ட்
போய்ட்டு வரேன் வினிதா
ம்ம் பாய் சிம்பு
(இப்ப புரியுதா நம்ப வினிதா எதுக்காக போன் வச்சிட்டு மாடில இருக்காங்கனு சரி வாங்க இனி என்ன நடக்குதுன்னு பாக்கலாம் )

வினிதா , வினிதா என்னங்க வினிதாவ பாத்தீங்களா
இல்லையேமா வீட்ல தான் இருப்பா தேடி பாரு
இல்லைங்க நான் வீடு முழுக்க தேடிட்டேன் இல்ல .
சரி மாடில பாத்தியா இல்லையே .
சரி வா போய் பாக்கலாம் வினிதா ஏய் வினிதா எழுந்துறுடி ஏன் மாடில வந்து படுத்துட்டு இருக்க .
என்னமா விடிஞ்சிடிச்சா சிம்பு இன்னிக்கு நைட் கால் பண்ணுவான்னு காத்து இருந்தேன் அப்படியே தூங்கிட்டேன் .
சரி வா இன்னிக்கு கோவிலுக்கு எங்கயாச்சி போய்ட்டு வரலாம் .
இல்லமா இன்னைக்கு சிம்பு நம்ப வீட்டுக்கு வருவான் அதனால யாரும் எங்கும் போக வேண்டாம் .
என்னமா சொல்ற 3 வருஷம் உன் கூட பேசாதவன் இனி வந்து உன்ன கல்யாணம் கட்ட வா போறான்
நீங்க தானே அப்பா அவன் கிட்ட சொன்னீங்க பேச கூடாதுன்னு அதான் பேசாம இருக்கான் எனக்கு நம்பிக்கை இருக்கு அப்பா .
சரி வா கீழ போகலாம் .
வாங்க சார் வாங்க, இங்க வினிதா யாரு?
என் பொண்ணு இவங்க தான்
வாமா வந்து பக்கத்துல உக்காரு
என்னங்க சார் அப்படி பாக்குரீங்க .யாரு இவங்க அவங்களா பேசிட்டு இருக்காங்கனு பாக்குரீங்களா .என் பையன் வெளில போன் பேசிட்டு இருக்கான் அவன் வந்தா உங்களுக்கே எல்லாம் புரியும் .
யாரு சார் நீங்க கொஞ்சம் புரயுற மாதிரி சொல்லுங்க.
சிம்பு இங்க வாபா உன் மாமனாரு உன் கூட பேசணுமாம் .
என்னங்க மாமா என்ன நியாபகம் இருக்கா இல்ல மறந்துடிங்களா . நான் தான் சிம்பு 3 வருஷம் முன்னாடி உங்க பொண்ண கேட்டு வந்தேன்ல அதே சிம்பு தான் . இப்பயும் அவள , அவள மட்டும் தான் நெனச்சிட்டு இருக்கேன் . இப்ப நான் உங்க பொண்ணு மேல வச்சிட்டு இருக்குற காதல் எவ்வளவுனு உங்களுகே புரயும்னு நெனைக்கிறேன்.இப்ப உங்க பொண்ண எனக்கு கொடுப்பிங்கனு நெனைக்கிறேன் .
நிச்சயமா இவ்வளவு உண்மையா காதலிக்கிற உங்கள பிரிக்க யாருக்கு தான் மனசு வரும் .
சரிங்க மாப்ள நீங்களும் வினிதாவும் பேசிட்டு இருங்க .
நாங்களும் சம்மந்தியும் கல்யானத்த எப்ப வச்சிக்கலாம்னு பேசிட்டு இருக்கோம் .
என்னங்க மேடம் இத்தன நாள் மாமாவ பாக்காம பேசாம எப்படி இருந்தீங்க .

ம்ம் நீங்க எப்படி இருந்திங்களோ அப்படி தான் நாங்களும் இருந்தோம் . போடா லூசு எவ்வளவு கஷ்ட பட்டுட்டேன் தெரியுமா i love you da செல்லம் ..

அதான் வந்துட்டேன்லமா .இந்த புது வருசத்துல இருந்து நம்ப புது வாழ்க்கை தொடரலாம் . wish you happy new year .
same to you da செல்லம்.
(சரிங்க ரொம்ப நாள் கழிச்சி ரெண்டு பேரும் பேசிட்டு இருக்காங்க இனி நமக்கு அது வேண்டாம் )
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் --

Saturday, December 19, 2009

பிரிவையும் நேசிப்பவள்

ஒரே ஒரு முறை காதலித்த குற்றத்திற்காக
ஒவ்வொரு நொடியும் இருந்தும்
இறந்து கொண்டு இருகிறாய்
மாற்றம் மட்டுமே மாறாத இந்த உலகத்தில்
நிச்சயம் உன் கவலைகளும் ஒரு நாள் மாறும்
கலங்காதே தோழா தோல் கொடுக்க
தோழி நான் இருக்கிறேன்



உனக்கும் எனக்குமான இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்
அதிகரித்துகெண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டே இருக்கிறேன்



உன் மடி மீது தலை சாய்த்து
நீ தலை கோதும் அழகிற்காகவே
காதலித்தவன் என்னோ இன்று
பஞ்சு தலையணையில் கூட
தலை சாய்க்க மறுக்கிறேன்
உன் நினைவு வருவதனால்





நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன




Wednesday, October 21, 2009

செல்லுடன் சேட்டை

நான் உன்னோடு சண்டை இட்டு
பேசாமல் இருக்கும் போது
என் செல்லில் Received மெசேஜ்
பார்க்கும் போதெல்லாம்
நீ தான் என்று ஒவ்வொரு
முறையும் ஏமாறுகிறேன்

நீ என்றோ அனுப்பிய குறுஞ்செய்தியை
நான் தினமும் நூறு முறை
புரியாமல் படிக்கிறேன் அது
என்ன மந்திர சொல் ஐ லவ் யூ

உனக்காக குறுஞ்செய்திகளை அனுப்பி
அனுப்பி தேய்ந்து என் செல்லின்
கீ போர்ட் மட்டும் அல்ல
என் விரல்களின் ரேகைகளும்
தான்

Thursday, October 1, 2009

என்னை மறந்துவிடு


உயிரோடு நான் இருக்க
உணர்வோடு நீ கலந்தாய் .
தென்றலென என்னை தொட்டு சென்று.
சுறாவளியாய் என்னை விழ்த்தி விட்டாய் .
மறக்க வேண்டும் என்று
முடிவு செய்த பிறகு.
என்னை மறக்க வேண்டும் என்று
நினைத்து கொண்டே இருக்காதே .
என்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
நீ என்னை தான் நினைக்கிறாய்
என்னபதை மறந்துவிடாதே .
நீ என்னை மறந்து விட வேண்டும்
என்பதையே மறந்து விடு .
அப்பொழுது தான் நீ என்
நினைவுகளையாவது முழுவதுமாக மறப்பாய் .
தன் நிழலை தானே தாங்கும்
தஞ்சை கோபுரத்தை போல
உனக்கான என் காதலையும் ,
எனக்கான உன் காதலையும்
நானே சுமந்து கொள்கிறேன்
கடைசி வரை

Wednesday, September 23, 2009

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்




எனக்கு இந்த வலை உலகில் கிடைத்த என் அம்மு செல்லம்,அப்பு செல்லம் , புஜ்ஜிசெல்லம்
தமிழரசி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

Friday, September 18, 2009

தேவதைக்கே வரம் கொடுக்க வந்த தேவதை




( யாரும் ஹெட்லைன் பாத்து டென்ஷன் ஆக கூடாது ஓகே )

எனக்கு இந்த தேவதைய அனுப்புவாங்க இயற்கை ராஜி இத‌ய‌ப்பூக்க‌ள்

தேவதை என்றால் கேட்ட வரதை கொடுக்க வேண்டும்

முதல் வரம் : இந்த 10 வரம் இல்லாமல் எனக்கு இன்னும் 10 வரம் எக்ஸ்ட்ரா வேண்டும் (இது எப்படி )

இரண்டாம் வரம் : நான் காதலித்த அந்த முதல் மூன்று மாதம் வேண்டும்

மூன்றாம் வரம் : எந்த வகைளும் என்னால் யார் மனதும் புண் பட கூடாது

நான்காம் வரம் : இழத்தில் இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு விரைவில் விடுதலை கிடைக்க வேண்டும்

ஐந்தாம் வரம் : என் நண்பனுக்கு இந்த தேவதையை போலவே அழகான அன்பான மனைவி கிடைக்க வேண்டும்

ஆறாம் வரம் : இனி வரும் எல்லா ஜென்மங்களும் என் அம்மாவுக்கே நான் மகளாக பிறக்க வேண்டும்

எழாம் வரம் : என்னவனிடம் நான் தொலைபேசில் பேசி கொண்டு இருக்கும் போது சார்ஜ் குறைய கூடாது, நேரம் போகக்கூடாது , பைசாவும் கட் ஆக கூடாது ( ஹ ஹ ஹ ஹ )

எட்டாம் வரம் : எனது பள்ளி படிப்பு ஐ.டி.ஐ இரண்டாம் ஆண்டு முழுவதும் திரும்ம கிடைக்க வேண்டும்

ஒன்பதாம் வரம் : உலகத்தில் சாதி, மதம் ஒழிக்க பட வேண்டும்

பத்தாம் வரம் : இனி வரும் எல்லா ஜென்மங்களிலும் என்னவனே எனக்கு இனியவனாய் அமைய வேண்டும்

(இன்னும் எக்ஸ்ட்ரா 10 வரம் இருக்குல ம்ம்ம்ம்ம்ம்ம்ம் )

என்னவன் என்னிடம் கேட்ட10 வரங்களும் நிறைவேற வாழ்த்துக்கள் ( அவங்களுக்கு நான் தானே தேவதை ஹ ஹ ஹ )

என் கிட்ட வந்த தேவதைய நான் யார் யாருக்கு அனுப்ப போறேன்

ஜமால் அண்ணன்
நிஜமா நல்லவர் அண்ணன்
abu அண்ணன்
சந்ரு
சத்ரியன்
viyaa

Friday, September 11, 2009

தொடர் பதிவு


என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் லோகு
1. A – Avatar (Blogger) Name / Original Name : /பிரிவையும் நேசிப்பவள் /காயத்ரி
2. B – Best friend? : butterfuly குய்
3. C – Cake or Pie? : இரண்டும் பிடிக்காது
4. D – Drink of choice? : இரண்டும் பிடிக்காது
5. E – Essential item you use every day? : மொபைல்
6. F – Favorite color? : மெருன்
7. G – Gummy Bears Or Worms : புரியவில்லை
8. H – Hometown? : சென்னை (ஆவடி)
9. I – Indulgence? : என்னவனை கோப படுத்துவது
10. J – January or February? : பிப்ரவரி
11. K – Kids & their names?::)))))))
12. L – Life is incomplete without?: காதல்
13. M – Marriage date? - கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் சொல்கிறேன்
14. N – Number of siblings? : ஒரே செல்ல பொண்ணு நான் மட்டும் தான்
15. O – Oranges or Apples? ஆப்பிள்..
16. P – Phobias/Fears? : புழு
17. Q – Quote for today? : அன்றைய வேலைகளை அன்றைக்கே செய்து முடிக்க வேண்டும்
18. R – Reason to smile? : சோகத்தை மறைப்பதற்கு
19. S – Season? குளிர் காலம்
20. T – Tag 4 People?-: யாரும் இல்லை
21. U – Unknown fact about me? இது வரைக்கும் எதுவும் இல்ல
22. V – Vegetable you don't like? கேரட், பீட்ரூட், முள்ளாங்கி......... இன்னும் நிறைய இருக்கு
23. W – Worst habit? : நண்பனின் மனதை எப்பவும் காய படுத்தி கொண்டே இருப்பது
24. X – X-rays you've had? இது வரை இல்லை
25. Y – Your favorite food? : சாம்பார் சாதம்
26. Z – Zodiac sign? மகரம்





1அன்புக்குரியவர்கள்: குழந்தைகள்
2ஆசைக்குரியவர்: என்னிடம் இருந்து விலகி கொண்டு இருப்பவர் 3இலவசமாய் கிடைப்பது : அன்பு
4.ஈதலில்சிறந்தது: வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது
5உலகத்தில் பயப்படுவது:புழு
6ஊமை கண்ட கனவு: என் மனதின் சோகத்தை போல
7எப்போதும் உடனிருப்பது:(என்னவனின் நினைவுகள் ) , மொபைல்
8ஏன் இந்த பதிவு: லோகு என்னை அழைத்ததற்காக
9ஐஸ்வர்யத்தில் சிறந்தது: இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பா ஒரு 10ரகசியம்: ரகசியம் ரகசியமாய் இருக்கட்டும்
11ஓசையில் பிடித்தது:யாரும் இல்லாதனிமைகளில் கேட்க்கும் என் கொலுசின் ஓசை
12ஔவை மொழி ஒன்று: என்னும் எழுதும் கண்ணென தகும்
13(அ)ஃறிணையில் பிடித்தது: புஜ்ஜி குட்டி அதாங்க பூனைக்குட்டி

எப்படியோ கொடுத்த வேலையே முடிச்சிட்டேன் :))))))))))

Thursday, September 10, 2009

காதல் தந்த வலி


நீயே என்னை வேண்டம் என்று
வெறுத்து ஒதுக்கிய பிறகு
என்னுள் இருக்கும் உன் காதலை
கண்ணீரால் அழிக்கலாம் என்று
அன்று முதல் இன்று வரை
அழுதுகொண்டே தான் இருக்கிறேன்
பிறக்கு தான் தெரிந்தது
நீ என் உதிரத்தில் கலந்து விட்டாய்
என்று என் உதிரத்தில் கலந்த
உன்னை என் உதிரத்திலேயே
வெளியேட்டுகிறேன்
எனக்கு அடுத்த ஜென்மம் என்று
ஒன்று இருந்தால் என்னை காதலே
இல்லாத இடத்தில் பிறக்க வை
இறைவாஇல்லையேல் என்னை
கருவிலேயே அழித்து விடு

Thursday, August 27, 2009

“And, Now…”

image-2765ok

எப்பொழுதும் மிஸ்ஸுடு கால் மட்டுமே

கொடுக்கும் செல் ஒன்று

என்னிடம் இருந்தது.

இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்ததும்

அவனுக்கு மிஸ்ஸுடு கால் கொடுத்து

நன்றாக மொக்கை போடுவேன்

வெகு சுவாரஸ்யமாக இருந்தது அந்த வாழ்க்கை!

ஒரு நாள் அவனுக்கு ராங் நம்பர் ஒன்று வர

ராங்க நம்பரோடு ஸ்ட்ராங் ஆகிவிட்டான்

அன்றிலிருந்து அவுட்கோயிங் மட்டுமே

போன என் செல்லில்

இன்கமீங் வருவதும் நின்றுவிட்டது

Tuesday, August 25, 2009

நண்பர் சிங்கைநாதனுக்காக பிரார்த்திப்போம்

நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.

எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.

இங்கும் பாருங்கள்

முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.

அன்புடனும் நட்புடனும் …
காயூ

Saturday, August 22, 2009

சொர்கத்திற்கு செல்ல



அந்தி மாலை நேரம்,
மல்லிகையின் மயக்கும் மணம்,
மன்னவனோடு நான்
சேர்ந்து நடக்க ,
என்னவனை சீண்டி விடும்
சில்லென தென்றல் காற்று,
தோள் மீது கை போட்டு
என்னை கட்டி அணைத்து..,
விரலோடு விரல் சேர்த்து ,
இதழோடு இதழ் சேர்த்து
கண்கள் மூடி காதல்
சொர்கத்திற்கு நாங்கள் செல்ல ,
ஒற்றை நிலவு மட்டும்
எங்களை ஏக்கத்தோடு
பார்த்து கொண்டு இருக்க ,
விண்மின்கள் அர்ச்சனை தூவ ,
நிலவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு
திரும்பினோம் மீண்டும் காதல்
சொர்கத்திற்கு செல்ல .

Sunday, August 2, 2009

நண்பர்கள் தினத்தில் நண்பர்களுக்கு விருது


எனக்கு இந்த விருது கொடுத்த சந்ரு மற்றும் அபுஅஃப்ஸர் அண்ணாக்கு மிக்க நன்றி
நண்பர்கள் தினத்தில் என் நண்பர்களுக்கு இந்த விருதை கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி

மறவாதே கண்மணியே.. லோகு
Honey ரோஸ்
http://vinupragadeesh.blogspot. வின்னு
காடுவெட்டி சுப்பு
உங்களில் ஒருவன் "ஷ‌ஃபி"
அச்சம் தவிர்... லோகு
மீசைக்காரி ராம் அண்ணா

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Wednesday, July 29, 2009

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்




வலை உலக நண்பர் மறவாதே கண்மணியே.. லோகு அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

Monday, July 27, 2009

வாழ்த்தலாம் வாங்க







அனைவரது நெஞ்சிலும் அன்பால் குடி கொண்டுள்ள என் அண்ணன்
ஜமால் அவர்களுக்கு இந்த அன்பு தங்கையின் மனமார்ந்த இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்




Wednesday, July 22, 2009

சுவாரஸ்ய பதிவர் விருது


நாங்களும் வங்கிடோம்ள ஆவார்டு
எனக்கு இந்த ஆவார்து கொடுத்த தமிழக அரசி (சாரி) தமிழரசி அம்மாவுக்கும் , ஷ‌ஃபிக்ஸ்கும் எனது நன்றிகள்


என்னை பெருமை படுத்திய இந்த ஆவார்டு மற்றவர்களையும் சந்தோஷ படுத்தட்டும் .

http://pappakudi.blogspot.com/. ராம்.CM அண்ணா
http://viyaa-ninaivugal.blogspot.com/ வியா
http://puthiyavaarppugal.blogspot.com/ பூர்ணிமா சரண்
http://panithuliyaai.blogspot.com/ இவன்
http://yesuvadian.blogspot.com/ நசரேயன்
http://yaavatumnalam.blogspot.com/ சுசி
சுசி மறுபடியும் எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து இருகாங்க நன்றி சுசி

Thursday, July 16, 2009

விழியில் கைதானேன்

முகம் மூடி என்னை கொள்ளை கொள்ள வந்த
முகமூடி கொள்ளைகாரி நீ தானோ
உன் கண்களை மட்டும் எதற்க்கு திறத்து
வைத்திருக்கிறாய் உன் இதயத்தை
திருடிய குற்றத்திற்காக இமைகளால்
என்னை கைது செய்து உன் மன சிறையில்
என்னை ஆயுள் கைதியாக்கி நித்தம் நித்தம்
முத்த தண்டனை கொடுபதற்காகவா

Wednesday, July 8, 2009

ஏக்கம்


நீ என் கவிதைகளை
படிக்க வர மாட்டாய்
என்று தெரிந்தும்
இங்கு உனக்காக
கவிதைகளை எழுதி வைத்து
காத்து கொண்டு
இருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
என் கவிதைகளை படிக்க
நீ வருவாய் என்ற
நம்பிக்கையில்
இலவுகாத்த கிளி போல .

Friday, July 3, 2009

வெட்கம்


நான் என் கைகளில் மருதாணி வைக்கும் போதுஉன் பெயரை சொன்னதால் மருதாணியும் வெட்கத்தால் எப்படி சிவந்து விட்டது என்று பார்

நீ என் விரல் பிடித்து நகம் கடிக்கும்

அழகிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும்

நகம்வளர்ப்பேன் நான்

Friday, June 26, 2009

நானும் பெங்குவினும்

நானும் இந்த பெங்குவின் ஒன்று தான்
என்ன பார்கிறாய் .
அதற்க்கு இறக்கை இருந்தும்
பறக்க முடியாமல் தவிக்கிறது .
எனக்கு உன் மீது
ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்
எனக்கும் இந்த பறவைபோல் உன்னோடு
கை கோர்த்து கடற்கரை அலைகளில்
கால் நனைக்க ஆசை தான்
ஆனால் நீயோ
உன் வியர்வையை தவிர என் மீது வேறு ஏதும் படாதபடி பார்த்து கொள்கிறாய்

Thursday, June 25, 2009

இதுவும் காதல்

ஆபிஸ்ல எந்த வேலையும் இல்லாம சும்மா இருந்ததுல கொஞ்சம் வெருப்பாகவும், ரொம்ப மூட் அவுட்டாகவும் இருந்தேன். சரி என்ன பன்னலாமுன்னு யோசிச்சிகிட்டே இருக்கும் போது ப்லாக் ஒரு ரவுண்டு அடிக்கலாமுன்னுதோனிச்சி, பஷ்ட்டுக்கா என்ற ப்லாக்க ஓபிங் செஞ்சு பார்த்தேன்அதிலிருக்கும் ஒவ்வொரு லின்க்கா(லிம்கா இல்லீங்கோ)ஓபிங் செஞ்சி பாக்க சொல்ல ஒரு தலீப்பு கண்ல மாட்டிக்கிச்சிஆண்கள் பொல்லாதவர்களா - இது தாம்மே தலீப்புஇந்த தலீப்ப பாத்த வுட்னே படிக்காமலே(எப்பவும் அப்படித்தானே ...)கமெண்ட் போடலாமுன்னு நன்ச்சி, சரி எதுக்கும் பட்ச்சிருவமேன்னுபார்த்தா நமக்கு புச்ச ஒருத்தரோட போட்டா
போட்டுகிறாங்க

http://thulasidhalam.blogspot.com/2009/02/blog-post_04.html

இத படிச்சதுக்கு அப்பறம் இந்த பறவைக்கு இருக்க அன்பு, பாசம், காதல், ஏன் மனுசங்களுக்கு இல்லன்னு தோனுச்சி
உங்களுக்கு என்ன தோணுதோ அத சொல்லிட்டு போங்க

Thursday, June 18, 2009

உன்னோடு கலந்த என் காதல்



உன்னை பற்றிய ஆயிரம் ஆசைகள்

மனதில் சுமந்து கொண்டு

என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு

நொடியிலும் இந்தநொடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்

நாளைய விடியலிலாவது உன்

முகம் காண மாட்டேனா

என்ற ஏக்கங்களுடன் விழி மூடுகிறேன்

உனக்காய் காத்திருந்த நொடிகள்

வீண் போகாமல் மாமன் மகன்

நி வர

நீ என்னை கட்டி அணைத்ததில்

காற்றுக்கும் மூச்சி திணறல்

ஏற்பட்டு விட்டது .

குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்

உன்னையே எனக்கு

போர்வையாய் மாற்றினாய்

உன்னோடு நான் கொண்ட காதல்

நான் மண்ணோடு மறையும் வரை

என்னோடு கலந்திருக்க வேண்டும்

Tuesday, June 2, 2009

வேண்டுகிறேன்



குடை பிடித்தபடி
உன்னோடு சேர்ந்து பயணிக்க
மழை வர வேண்டுகிறேன்!

குடை இல்லாத‌ நேர‌த்து
ம‌ழையாய் நீயே வ‌ர‌ வேண்டும்
என்று வேண்டுகிறேன்!

மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக் கொண்டிருக்க
வெயிலடிக்க் வேண்டுகிறேன்!

கடலில் கால் நானைத்தபடி
உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க
அலையடிக்க் வேண்டுகிறேன்!

கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!

காதலித்தபடிஉன்னையே
க‌ண‌வ‌னாக‌ கைபிடிக்க‌
வேண்டுகிறேன்...

ஹைய் பா நான் ம‌றுப‌டியும் வ‌ந்துட்டேன் ஒகே
இனி எப்ப‌வும் போல‌ கும்மி அடிக்க‌லாம்:))))))))))

Tuesday, May 26, 2009

உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்


விழி மூடி யோசிக்கையில் சித்திர‌மாய் நிற்கிறாய்
விழி திறந்து பார்க்கையில் நித்திறையை
போல் காற்றில் கரைகிறாய்.

நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
உன் முழு அன்பு அதற்காவது கிடைக்கட்டும்

உன் மெளனத்தால் ஒவ்வொரு நாளும்
தீயில் விழுந்த புழுவாய் துடித்து கொண்டு இருக்கிறேன்.
உன்னை விட்டு பிரியும் நாள் நெருங்கி
கொண்டு இருப்பதை நினைக்கும் போதெலலாம்

வாழ்வின் கடைசி நொடியில் என் சந்தோசங்களை
நிறைவேற்றி கொள்வதை போல
உன்னிடம் என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்


என் மன‌ம் தாங்கிய சுமைகளை கண்ணீரால்
கரைத்து கொண்டு இருக்கிறேன்.
இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு

Sunday, May 24, 2009

என்னை பற்றி உங்களுக்கு



1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


என் ஜாதகப்படி முதல் எழுத்து “கா”வில் தொடங்குவதால் காயத்திரி என்ற இந்த பெயர் வந்தது.
ரொம்ப பிடிக்கும்.... எங்க அம்மா எனக்கு இன்னொரு பெயர் வச்சி இருக்காங்க அனிதான்னு அத பயன்படுத்திக் கொள்வேன்.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும்... அதான் 100 பக்கம் அசைன்மென்டுக்கு 125 பக்கம் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன் (ஆன நான் எழுதுனது அவங்களுக்கு புரியுமான்னு தெரியல?:)))))))))))


4.பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார் சாத‌ம் , அப்ப‌ள‌ம் ( பிந்து அப்ப‌ள‌ம் இல்ல‌ எந்த‌ அப்ப‌ள‌மா இருந்தாலும் ஒகே)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நம்‌ப‌ கூட‌ க‌டைசி வ‌ரைக்கும் வ‌ர‌ப் போவ‌து ந‌ட்பு தான் . அத‌ வ‌ச்சிக‌ யோசிக்க‌லாமா?


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
க‌ட‌லில் அலையை இர‌சிக்க‌ ம‌ட்டும் தான் பிடிக்கும் . அருவியில் குளிச்சா மூச்சி முட்டும் .அத‌னால‌ என‌க்கு ஆத்துல‌ குளிக்க‌ தான் பிடிக்கும் . (அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன் )


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
க‌ண்க‌ள் , முடி , உடை ,


8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் கை விர‌ல்க‌ளில் ந‌க‌ம் வ‌ள‌ர்ப்ப‌து மிக‌வும் பிடிக்கும் .
என்னை பிடித்த‌வ‌ர்க‌ளை மிக‌வும் கோவ‌ப்ப‌டுத்துவ‌து பிடிக்காது( இருந்தாலும் மாற்றிக்கொள்ள முடிய‌வில்லை)


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னோட‌ ச‌ரி பாதி என் கிட்ட‌ முழுசா வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் இத‌ப் ப‌த்தி சொல்றேன்... ஒக்கே


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் ஃப்ர‌ண்ஸ்


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்
மெரூன் க‌ல‌ர் சுடி


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
டைப் பண்ணறதால எங்க‌ சார் வராரான்னு பாத்துக்கிட்டு இருகேன்.
அய‌ன் ப‌ட‌த்துல‌ நெஞ்சே... நெஞ்சே...நீ எங்கே நானும் அங்கே( அந்த‌ பாட‌ல் கேட்டுகிட்டு இருக்கேன்)


13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
மெரூன் க‌ல‌ர் என‌க்கு ரொம்ப‌ பிடிச்ச நிற‌ம். அப்ப‌ற‌ம் எப்ப‌வாவது க‌ருப்பு


14. பிடித்த மணம் ?
ம‌ண் வாச‌ம் இப்ப‌வும் அத‌ அனுப‌விச்சுட்டு தான் இருக்கேன்..... அட‌ இங்க‌ ம‌ழை வ‌ருதுன்னு சொல்றேன் அவ்வ‌ள‌வு தான் .
அப்ப‌ற‌ம் மாலை நேர‌ம் ம‌ல்லிகை ம‌ல‌ரும் வாச‌ம்.புது புத்த‌க வாச‌ம்


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ச‌க்தி காத‌ல் க‌விதை ம‌ட்டும் இல்லாமல் ம‌த்த‌ எல்லா க‌விதையும் அழ‌கா எழுதுவாங்க‌.....வியா க‌விதையில் இருந்து இப்ப‌ புதுசா க‌தை எழுதுறாங்க‌... கொஞ்சம் நிஜ‌ம்... கொஞ்சம் ...க‌ற்ப‌னை க‌ல‌ந்து.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
என்னை இந்த‌ ப‌திவிற்கு அழைத்த‌வர் அ.மு.செய்யது .அவ‌ருடைய‌ ப‌திவில் என‌க்கு பிடித்த‌து அந்த‌ முத‌ல் ச‌ந்திப்பு க‌தை என‌க்கு ரொம்ப‌ பிடித்து இருந்தது....


17. பிடித்த விளையாட்டு?
பிடித்த‌ விளையாட்டுன்னு எதுவும் சொல்ல‌ முடியாது. ஆன‌ பாப்பாங்க‌ கூட‌ விளையாடற‌து பிடிக்கும்.


18.கண்ணாடி அணிபவரா?
இல்லை


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ந‌ல்ல காத‌ல் திரைப் ப‌ட‌ங்க‌ள், காம‌டி திரைப்ப‌ட‌ங்க‌ள். ஜெய‌ம் , கோவில், ப‌ருத்திவீர‌ன், நெஞ்சிருக்கும்வ‌ரை.


20.கடைசியாகப் பார்த்த படம்?
வெண்ணிலா க‌ப‌டி குழு அதுல‌ கூட‌ க‌டைசி சீன் பாக்கவில்லை...


21.பிடித்த பருவ காலம் எது?
இலையுதிர்க் கால‌ம் முடிந்த‌ பிற‌கு . மீண்டும் புதிதாக‌ இலை வ‌ரும் கால‌ம் . அத‌ எப்ப‌டி சொல்ற‌துனு தெரிய‌லை (நீங்க எல்லாம் ரொம்ப‌ அறிவாளிங்க‌ நீங்க‌ளே புரிந்துகொள்வீர்கள் என்று என‌க்கு தெரியும்:)))))))))}]

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போதைக்கு ப‌ரிட்சைக்காக‌ என்னோட‌ புத்த‌க‌த்தை ம‌ட்டும் தான் ப‌டிச்சிட்டு இருக்கேன்.


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
என‌க்கு எப்போதெல்லாம் தோனுகிறதோ அப்போதெல்லாம் மாற்றுவேன்.


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த‌ சத்த‌ம் : ஜெய‌ம் ப‌ட‌த்துல‌ விசில் ச‌த்த‌ம் , வோட‌போன் விள‌ம்ப‌ர‌த்துல‌ வ‌ர‌ பொம்மைக‌ள் பேசும் ச‌த்த‌ம் ரொம்ப‌ பிடிக்கும்,
பிடிக்காத‌ ச‌த்த‌ம் : நான் தூங்க‌ன‌ பிற‌கும் வ‌ர‌ டிவி ச‌த்த‌ம்


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
5 நாள் அம்மாவையும் வீட்டையும் விட்டுட்டு ஊட்டி , கொடைக்கான‌ல் போன‌து


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
த‌னித்திற‌மைன்னு ஒன்றும் இல்லை ஆனால் நான் எழுதுற‌ க‌விதைக‌ள் எப்ப‌டி வ‌ந்த‌து எங்க‌ இருந்து வ‌ந்த‌து என்று தெரியலை (நீங்க‌ ஒத்துக்கிட்டா வேணும்னா அத‌ ஒரு திற‌மைனு வ‌ச்சிக்கலாம் என்ன‌ சொல்றீங்க)


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை .எதா இருந்தாலும் அதன் போக்கிலேயே போய் ப‌ழ‌கிட்டேன்.


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எல்லார் மேலே‌யும் அதிக‌மா அன்பா இருப்பது


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஊட்டி , கொடைகான‌ல், வேலுர் கோல்ட் டெம்புல்


30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்ப‌ என‌க்கு கிட‌ச்சி இருக்க‌ ஃப்ரண்ஸ் விட்டு போகாமல் எப்ப‌வும் அவ‌ங்க‌ கூட‌வே இருக்க‌னும் என்று ஆசை ( ஆசை ப‌ட்டதெல்லாம் ந‌ட‌க்குமா என்ன‌?)


31.மனைவி/ கணவர் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அதெல்லாம் அவ‌ங்க‌ வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் பாக்க‌லாம!!!!!!


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் ரொம்ப‌ சின்ன‌ பொண்ணு நான் என்ன‌ சொல்ற‌து இதுக்கு......
ம்ம்ம்ம்ம்ம் க‌ட‌வுள் கொடுத்த‌ ஒரு லைப் அத‌ ந‌ல்லா ச‌ந்தோஷமா வாழனும் அதான்.... .

Monday, May 18, 2009

நீயே வேண்டும் என்று வரம் கேட்பேன்



இறைவனிடம் போராடி மறுஜென்மம்
எடுத்து என்னை பெற்றெடுத்தாய்......
உன் இரத்தத்தையே எனக்கு உணவாக்கினாய்....

நான் உன் மார்பினில் எட்டி உதைக்கும் போதும்
பிஞ்சி பாதங்கள் என்று முத்தம் இட்டாய்.....
நான் நடை பழகும் போது கால் தடுமாறி
நான் கீழே விழ உன் மனம் பதறி...

என் கை பிடித்து நடை பழக கற்று கொடுத்தாய்
உன் ஆசைகளை துறந்து
என் சந்தோசங்களை நிறைவேற்றினாய்....
கண்கள் மோதலால் வந்த காதலால்
உனை மறந்து எண்ணவணை மணந்தேன்.....

உணை மறந்ததால் தான் என்னவோ
இன்று நூல் அறுந்த பட்டம் போல்
திசை தெறியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறேன்.....

இன்றும் என் கை பிடித்து
வாழ்கை பயணம் செய்ய
கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கிறாய்...

இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல
இனி என் எல்லா ஜென்மத்திலும்
நீயே என் தாயாக வேண்டும் என்று
இறைவனிடம் வரம் கேட்பேன்!!!!!!!

Friday, May 15, 2009

????


இரவெல்லாம் நான் கண் விழித்து படிக்க
உன் நினைவுகள் என்னுள் விளக்காய் எரிகின்றன .
இந்த தீ நீர் அணைத்தால் அணையாது
நீ அணைத்தால் அணைந்துவிடும்
கல்வி பாடம் எப்படி என்னுள்
காதல் பாடமாய் மாறியது?

Friday, May 8, 2009

நன்றி விகடன்


யூத்விகடனில் ஜுட் பகுதியில் என்னோட கவிதை இரண்டாவது முறையாக காத்திருந்த இதயம் வந்து இருக்கு .
http://youthful.vikatan.com/youth/gayathripoem05052009.asp
எனக்கு மிக மிக சந்தோஷமா இருக்கு.
என்னுடைய கவிதைகளுக்கு பின்னுட்டம் இட்டு என்னை ஊக்க படுத்திய என் நண்பர்களுக்கு நண்றியை தெரிவித்துகொள்கிறேன்
விகடனுக்கும் என் நண்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
என் கவிதைகூட வேற யாருடைய கவிதையோ ரெண்டு வந்து இருந்துச்சி அவங்க கவிதையும் நல்ல இருந்துச்சி அவங்க பெயர் இப்ப நியாபகம் இல்ல .இருந்தாலும் அவங்களுக்கும் நம்ப வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கலாம் என்ன் நான் சொல்றது சரிதானே. பெயர முக்கியம் கவிதை தானே முக்கியம்

Tuesday, May 5, 2009

சொல்லாத காதலும் காதல் தானே


உன்னோடு நான் கொண்ட
காதல் உன்னிடம் சொல்ல
முடியாமல் தவிக்கிறேன்.
உன் பெயரை சொல்லி யார் அழைத்தாலும்
உடனே திரும்பி பார்க்கிறேன்.
சொல்லாத காதலும் காதல் தானே
உன்னுடன் நான் பேச நினைத்து
உன்னை அழைக்கும் போது சம்மந்தமே
இல்லாமல் யாரே ஒரு பெண்
the person your call has not replayed plese try again latter thank u
என்று சொல்லும் போதும் என்னையும்
அறியாமல் கோவம் வருகிறது
சொல்லாத காதலும் காதல் தானே
உனக்கு பிடித்த உடையில் கண்களில்
காதலுடன் வழி மீது விழி வைத்து
காத்து இருக்கிறேன்இதையும் மீறி
என் சொல்லாத காதலை எப்படியடா
சொல்லா முடியும் என்னால்

Monday, May 4, 2009

இதற்கு என்ன பெயர்


என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
உன் நினைவுகள் என்னை எழுப்ப
இன்று என்னுல் எதோ ஒரு மாட்றம்
காலையில் கணினி திறையில்
உன் புகை படத்தை தேடினேன்.
உன் முகம் பார்த்ததில் 1000 பட்டாம்பூச்சிகள்
பறந்தன என் நெஞ்சில்
நடை பாதை கடைகளில்
உன் பெயர் படிக்க என்னையும்
அறியாமல் ஒரு சிரு
புன்னகையை சிந்திவிட்டு போகிறேன்
உன் குரல் கேட்க்கும் ஆசையில்
10 எண்களுக்குள்ளே 10 எண்களை கண்டுபிடித்து
உன்னை அழைக்க அது திசைமாறி போக.
என் தோழிகளிடமெல்லாம் உன்னை
பற்றி மஹாபாரதம் பாடா.
அழகுக்கு மேலும் அழகு செய்து கொண்டு
உன்னிடம் எப்படி பேச வேண்டும்
என்று கண்ணாடி முன் நின்று 10 முறை
ஒத்திகை பார்க்க . இரவு உணவு உண்ணும்
வேளையில் உன் நினைவுகள் என்
மன‌தினில் நிறைந்துஇருக்க அங்கு
உணவுக்கும் வேலை கொடுக்காமல்.
இரவின் கை பிடித்து அதனுடன் கதை
பேசிகொண்டு இருக்கிறேன்.
என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
என்னுள் வந்த இந்த மாற்றத்திற்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா

Friday, May 1, 2009

யூத் ஃபுல் ஜூட் பிரிவில் என்னேடா கவிதை


வலை உலகில் முதன் முறையாக என்னேடா இதழ் தொட்ட பட்டாம்பூச்சி இந்த கவிதை யூத் ஃபுல் விகடனில் வந்து இருக்கு என்ன சொல்றதுனு தெரியல ரொமப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த டைம்லா நான் யூத் ஃபுல் விகடனுக்கு என் நன்றிகளை தொறிவித்து கொள்கிறேன்.

அது மட்டும் இல்லாமா நீ எழுதுற கவிதைகளை யூத் ஃபுல் விகடனுக்கு அனுபுன்னு விகடன் ஐடி கொடுத்த சக்திக்கும். என்னோடா கவிதை விகடனில் பாத்து என்க்கு சொன்ன‌ த‌மிழர‌சி அம்மாவுக்கும் என்னோட‌ ந‌ண்றிக‌ளை தெறிவித்து கொள்கிறேன்.


நான் எழுதுற கவிதைகளை படித்து எனக்கு ஊக்கம் அளித்த என் வலை உலக நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் நண்றிகளை தெறிவித்து கொள்கிறேன்.

இதுல எனக்கு இனொரு சந்தோஷமும் இருக்கு.

புதியவன்.... (மெல்லிய பூக்களிலெல்லாம்)
இங்கே..(மெல்லிய பூக்களிலெல்லாம)

அபுஅஃப்ஸர் ........ ( (நிர்வாண இரவுகள்)
(நிர்வாண இரவுகள்)

இவங்க கவிதைகள் கூட என் இதழ் தொட்ட பட்டாம்பூச்சி வந்தது ரொம்பா சந்தோஷமா இறுக்கு


என்னுடைய இதழ் தொட்ட பட்டாம்பூச்சி
இங்கே.. (இதழ் தொட்ட பட்டாம்பூச்சி)

புதியவன் மட்றும் அபுஅஃப்ஸர்க்கு என் வாழ்த்துக்களை தெறிவித்து
கொள்கிறேன்

மறுபடியும் ஒரு முறை யூத் ஃபுல் விகடனுக்கு என் நண்றிகளை தெறிவித்து கொள்கிறேன்

Tuesday, April 28, 2009

இதழ் தொட்ட பட்டாம்பூச்சி

என்றும் பூக்களளையே சுற்றி வரும்
பட்டாம்பூச்சி ஏனோ இன்று
என்னவளையே சுற்றி வந்தது .
எந்தன் இந்த புரியாத பார்வைக்கு
இன்று பூமியில்புதிதாக பூத்த இந்த
பூவின் இதழிலிருந்து தேன் எடுக்காமல்
போக மாட்டேன் என்று என் எதிரிலேயே
என்னவளிடம் மல்லுகட்டுகிறது .
என்னவளின் வெட்கத்தை பார்த்தே
வண்ணத்து பூச்சிகளுக்கு வண்ணங்களை
பூசினான் அந்த இறைவன் .
என்னவளின் மென்மையான பரிசத்தை
பார்த்தே ரோஜாக்களை படைதான்
அந்த இறைவன் .
என்னவளின் கொடி இடை அழகை
பார்த்தே சிற்பியை படைத்தான்
என்னவளின் அன்பை பார்த்தே என்னை
படைத்தான் அவளிடம் ஆயுள்
கைதியை கணவனாக இருக்க .
என்னவனே நீ என்னிடம் உன் முதல்
காதலை சொல்ல வரும்போது
உன் இமைகளின் பட படப்பை
பார்த்து பட்டாம் பூச்சி பறக்கவும்
நீ என்னை விட்டு போன பிறகு
என் இதய துடிப்பை பார்த்து
மீன்கள் தரையில் துடிக்கவும்
கற்றுகொண்டதடா

Friday, April 24, 2009

நாளை விடியலாவது நல்ல விடியலாய் அமையுமா இலங்கை தமிழ் மக்களுக்கு...



என் சகோதர சகோதரிகளே இன்னும்
எதனை நாள்கள் தான் நீங்கள்
அங்கே கஷ்டத்தில் இருக்க
போகிரிகள் மரணத்தை விடவும்
கொடியது மரண பயம் இன்னும்
எத்தனை நாட்கள் தான் ஒவொரு
மணி துளிகளையும் மரணத்தோடு
போராட போகிரிகள் இன்னும் எத்தனை
நாள் தான் உங்கள் இரவுகளை
பகலுக்கு காணிக்கை
ஆக்கிஉங்கள் மானத்தையும் கர்புக்களை
paathu காக்க போகிரிகள் இன்னும்
எதனை நாள் தான் விடியல் காலையில்
உன் பிள்ளைகளின் பிணங்களையும் உன்
சுற்றத்தின் பிணங்களையும் தேடி
கொண்டு இருக்க போகிறாய்
விலங்குகள் குடா தன் இனத்தை தானே அழிக்காது
ஏனோ மனிதர்கள் ரத்த வெறி பிடித்த
பேய்களாய் மாறி போனார்கள்
இலங்கை ராணுவமே
உங்களுக்கு மட்டும் இறைவன் இதயத்தை
கல்லால படைத்தது விட்டன என்ன ?
இறைவானால் வரமளிக்க பட்டு
பூமில் நடக்கும் ஒரே பூ குழைந்தைகள்
தான் அதையும் உன்னால் எப்படியடா அழிக்க முடிகிறது ?.
உங்களின் ரத்தவெறி அந்த பிஞ்சு குழ்ந்தைகளை பார்த்துமா உங்களால் கொள்ள முடிகிறது
ஆயிரம் கனவுகளோடு vaytril kuzanthaiyai சுமந்து
கொண்டு உங்களிடம் போராடி கொண்டு
இருக்கும் கர்பிநிகளை எப்படியடா
உங்களால் தாக்க முடிகிறது
இல்லங்கை தமிழ் மக்களே உங்களை எண்ணி
எங்களால் தினம் தினம் கையாளகமல்
கண்ணிற் மட்டுமே விட்டு கொண்டு இருக்கிறோம்
இந்திய அரசாங்கமே இதற்கு நீ தான்
ஒரு முடிவு கட்ட வேண்டும்
உன் அரசியல் போதைக்கு நம் மக்களையே
பலி ஆக்காதிர்கள்
நீங்கள் எடுக்கும் முயற்சி எதுவானாலும்
விரைந்து செயல்பாடு
அங்கே கூட்டம் கூடமாக எரிக்க படுவது
நம் சகோதர சகோதரிகள் என்று மனதில் கொள்
தமிழன் என்று சொல்லுடா தலை
நிமிர்ந்து நில்லுடா என்று சொன்னதால்
தலை இல்லாமல் இருக்கும் நம் தமிழ்ர்களுக்கு
நாம் தமிழன் என்ற முறையில் என்ன செய்ய போகிறோம்
ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தால் ithanaal
இல்லங்கை தமிழ் மக்களுக்கு நம்மால்
எதாவது செய்ய முடிந்ததா
இப்போது இல்லங்கைக்கு அனுப்பி வைக்க
பட்டுள்ள நம் தூதூவர்கல் மூலமாவது
நாளைய விடியலாவது இலங்கை தமிழ் மக்களுக்கு நல்ல விடியலாய் அமையுமா என்று கடவுளிடம் பிராத்திப்போம்

Wednesday, April 22, 2009

என்ன சுற்றி வரும் பட்டாம்பூச்சி

என்னபா இந்த அவோர்ட் எங்கயோ பாத்தா மாதிரி இருக்க . இதுக்கு முன்னாடி ஒரு முறை என் ப்லோக்லையே பாத்து இருக்கலாம் .இந்த ப்லோக் உலகத்தையே ஒரு சுத்து சுத்திட்டு என்ன விட்டு பிரிய மனசு இல்லாம மருபடயும் என் கிட்டயே வந்துடிச்சி . அட இன்னுமாபா புரியல நம்ப மீசைக்காரி ராம். சி எம் அண்ணா இந்த அன்பு தங்கச்சிக்கு பட்டாம்பூச்சி அவோர்ட் கொடுத்து இருக்காரு . இந்த அவோர்ட் கொடுத்த அண்ணாக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் .அண்ணா என்னபத்தி உங்க ப்ளோக்ல நீங்க எழுதி இருகர்த்த பாக்கும் போது எனக்கு வெக்க வெக்கமா வருது அண்ணா சோ அதுக்கு ஒரு நன்றிகள் .


இந்த அவோர்ட் பாத்தா ஒடனே எல்லார் மனசுலயும் பட்டாம்பூச்சி பறக்குதா
ஓகே நான் பெற்ற இந்த சந்தோசத்த மற்றவர்களுடன் பகிர்ந்துக்க போறேன் அவங்க யார்னா

தமிழுக்கே அரசியான தமிழரசி அம்மா
http://ezhuthoosai.blogspot.com/ இவங்கள பத்தி நான் சொல்லறத விட நீங்களே போய் பாருங்களேன் கவிதை எல்லாம் அழக எழுதுவாங்க

வியா புதுசா கதை எழுத ஆரம்பிச்சி இருகாங்க
http://viyaa-ninaivugal.blogspot.com/ அவங்க இன்னும் நெறைய கதை கவிதை எழுத என் வாழ்த்துக்கள்

Monday, April 20, 2009

இனிய திருமண நல் வாழ்த்துக்கள்


இன்று மாலை திருமணம் செய்ய விருக்கும் என் தோழி சுஜிக்கு
புது இல்லறம் நல்லறமாய் அமைய என் வாழ்த்துக்கள் .

ஹாய் டி செல்லம் இனிய திருமண நல் வாழ்த்துக்கள்

புது இல்லத்தில் புது மணமகளாய் அடி எதுத்து வைக்கும் என் குல விளக்கே
.
அறிமுகம் இல்லாத மனிதர்கள் , பரிச்சய படாத குணங்கள் என எல்லாம் கலந்து இருக்கும் உன் புகுந்த வீட்டில் நியும் அவங்கள மாதிரி அவங்க குணத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ .
எப்பவும் சந்தோசமா இரு .
இனி உன்னில் பாதிய இருக்க போற உன் கணவர் கிட்ட அன்பா இரு .
எந்த விஷயமா இருந்தாலும் விட்டு கொடுத்து போ. அதுக்காக நீ எதுக்காகவும் உன் தன்மானத்த விட்டு கொடுக்காத .
கணவரோட அம்மாவ உன் அம்மாவ நினசிகோ பெரியவங்க கிட்ட மரியாதைய நடந்துக்கோ . உன் நாத்தனார் கிட்ட ஒரு தோழி போல நடந்துக்கோ .எப்பொழுதும் கவலை இல்லாமல் சந்தோசமா இரு
மற்றவை நேரில்

வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் மாந்தர்களும் வாழ்த்துவர்
உன் தோழியான நானும் வாழ்த்துவேன் என் தோழைமையான என் ப்லோக் உலக நண்பர்களும் உன்னை வாழ்த்த
வாழ்க நிவீர் பல்லாண்டு பல்லாய்ரத்தாண்டு என்று இந்த உலகும் உன்னை வாழ்த்தும்

Wednesday, April 15, 2009

நினைவெல்லாம் நியே


என்னவனே நீ என்னை மயக்கிய
இந்த மாலை வேளையில்
நான் உன் கை பிடித்து நடக்கும்
இந்த பயணம் முடிவில்லா இந்த
வானமும் பூமயும் போல் தொடர்ந்து
கொண்டே இருக்க
வேண்டும் .


என்னவனே நீ உன் கைகளால்
என் கன்னங்களை பிடித்து
நீஅருகினில் வந்து முத்தம்
இடும் நேரத்தில் என் கண்கள்
வெட்கத்தால் அதன் இமை கதவுகளை
பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு
கதவு திரக்க நீ கொடுத்த
முத்தம் நித்தம் நித்தம்
இனிக்குதடா


என்னவனே உன் பெயரை எழுதி

எழுதி உன் பெயரே எனக்கு

ஸ்ரீ ராமாஜெயமாய் மாறி

போனதடா

இறைவன் வந்து என்னிடம்

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்

.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் என்று கேட்பேனடா.