Tuesday, March 31, 2009

ஊடல்களுக்குள் ஒரு காதல்

என்னவனே என் நாளேட்டில்
உன் நினைவுகளை நிரப்பி
கொண்டிருக்கும் போதே
என் செல் பேசியில் உன் பெயர் சிணுங்க
அதை பார்த்து நான் சிணுங்க
என் மனதிலும் உன் நினைவுகளை
நிரப்பி விடுகிறாயடா

என்னவனே நீ என்னை வேண்டாம்
என்றதும் என் இதயம் கிழே விழுந்து
இரண்டாகி போனதடா
நன்றாக பார் என் இதயத்தில்
இருக்கும் குட்டி இதயம் உன்னுடையது தான்
உன் இதயம் உனக்கு வேண்டும் என்றால்
என் இதயத்தை கிழித்து
உன் இதயத்தை எடுத்து கொள்
உன்னால் முடிந்தால்


என்னவனே நீ என் கை பிடித்து
போட்ட மோதிரத்தை
பார்க்கும் போதெலாம்
உனக்கும் எனக்குமான
ஊடல்களும் மறந்து
போகிறேனடா



நான் உன் மார்போடு
சாய்ந்து கொண்டு இருக்கும்
போது எப்படியடா என் மன
சுமைகளையும் நீயே சுமக்கிறாய் .
உன்னால் மட்டும் எப்படியடா
என் மீது பாசத்தை மட்டும்
காட்ட முடிகிறது .
நான் என்ன தவம் செயதேனட
நீ எனக்கு வரமாய் கிடைத்து
இருகிறாய்




கஷ்டங்கள் வரும் போது தான்
கடவுளை நினைபார்கலாம் மனிதர்கள் .
ஆனால் நானோ எனக்கு எந்த
கஷ்டமும் சந்தோசம் வந்தாலும்
முதலில் உன்னை நினைகிறேனடா
ஒரு வேலை நீ தன் என் காதலனோ ?