Wednesday, April 15, 2009

நினைவெல்லாம் நியே


என்னவனே நீ என்னை மயக்கிய
இந்த மாலை வேளையில்
நான் உன் கை பிடித்து நடக்கும்
இந்த பயணம் முடிவில்லா இந்த
வானமும் பூமயும் போல் தொடர்ந்து
கொண்டே இருக்க
வேண்டும் .


என்னவனே நீ உன் கைகளால்
என் கன்னங்களை பிடித்து
நீஅருகினில் வந்து முத்தம்
இடும் நேரத்தில் என் கண்கள்
வெட்கத்தால் அதன் இமை கதவுகளை
பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு
கதவு திரக்க நீ கொடுத்த
முத்தம் நித்தம் நித்தம்
இனிக்குதடா


என்னவனே உன் பெயரை எழுதி

எழுதி உன் பெயரே எனக்கு

ஸ்ரீ ராமாஜெயமாய் மாறி

போனதடா

இறைவன் வந்து என்னிடம்

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்

.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் என்று கேட்பேனடா.