இந்த மாலை வேளையில்
நான் உன் கை பிடித்து நடக்கும்
இந்த பயணம் முடிவில்லா இந்த
வானமும் பூமயும் போல் தொடர்ந்து
கொண்டே இருக்க
வேண்டும் .
என் கன்னங்களை பிடித்து
நீஅருகினில் வந்து முத்தம்
இடும் நேரத்தில் என் கண்கள்
வெட்கத்தால் அதன் இமை கதவுகளை
பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு
கதவு திரக்க நீ கொடுத்த
முத்தம் நித்தம் நித்தம்
எழுதி உன் பெயரே எனக்கு
ஸ்ரீ ராமாஜெயமாய் மாறி
போனதடா
உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்
.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்
பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்
மாற வேண்டும் என்று கேட்பேனடா.