Saturday, December 19, 2009

பிரிவையும் நேசிப்பவள்

ஒரே ஒரு முறை காதலித்த குற்றத்திற்காக
ஒவ்வொரு நொடியும் இருந்தும்
இறந்து கொண்டு இருகிறாய்
மாற்றம் மட்டுமே மாறாத இந்த உலகத்தில்
நிச்சயம் உன் கவலைகளும் ஒரு நாள் மாறும்
கலங்காதே தோழா தோல் கொடுக்க
தோழி நான் இருக்கிறேன்



உனக்கும் எனக்குமான இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்
அதிகரித்துகெண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டே இருக்கிறேன்



உன் மடி மீது தலை சாய்த்து
நீ தலை கோதும் அழகிற்காகவே
காதலித்தவன் என்னோ இன்று
பஞ்சு தலையணையில் கூட
தலை சாய்க்க மறுக்கிறேன்
உன் நினைவு வருவதனால்





நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன