Wednesday, September 15, 2010

காற்றின் தழுவல்


காற்றிக்கும் காதுகள் உண்டு என்பதை
அன்று தான் கண்டு கொண்டேன்
மொட்டை மாடியில் நின்று
மூன்றாம் பிறையையும் அதற்கு துணையாய் இருந்த
நச்ச்திரத்தையும் உன் நினைவோடு
ரசித்து கொண்டு இருக்கும் போது
காற்றில் மூலம் நீ தூது அனுப்பிய செய்தியை .
தென்றல் வந்து என்னை தழுவி சொன்னது.
உன்னவனும் உன்னை இப்படி தான் தழுவ
எண்ணுகிறான் என்று .

Thursday, August 26, 2010

சொல்லாமல் போன என் காதல்


உன்னோடோ கை கோர்த்து நடக்க பழக
ஆசை பட்டதிலிருந்து தெரிந்திருக்க வேண்டும் ,
உனக்கான என் கோபங்களை விட்டு கொடுத்ததிலிருந்து
தெரிந்திருக்க வேண்டும் ,

உன்னோடு உரையடுவதகாக என் நொடிகளை
எண்ணி கொண்டு இருக்கும் போதாவது
தெரிந்திருக்க வேண்டும்,
இன்னொரு பெண்ணை பற்றி என்னிடம்
பேசும் போது எனக்கு வந்த கோபத்தில்லாவது
தெரிந்திருக்க வேண்டும்,

உனக்கு பிடித்த பாடல் என்பதால் அதே படலை
ஒன்றுக்கு பாத்து முறை
நான் கேட்ட போதாவது தெரிந்திருக்க வேண்டும் ,


அப்பொழுதெல்லாம் தெரியாத
உன் மீதான என் காதல்
இதோ இப்பொழுது தெரிந்து விட்டது,

இனி நீயும் நானும் பேச போவதில்லை
என்று தெரிந்து பிரியும் போது ,

என்றும் உன்னை மறவாமல் உன் நிழலென
தொடரும் உன் கண்மணி காதலுடன் .

Monday, August 16, 2010

காதல்

விளையாட்டாக உன்னிடம் கேட்டேன்
என் மூச்சி காற்றில் கலந்த
உன் உயிரை என்னிடம் இருந்து
எப்படி பிரிப்பாய் என்று ?
இதோ இப்படி தான் என்று என்
இதழோடு இதழ் சேர்
கிறாயாட கள்வா.





யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில்
உன் கை பிடித்து ஓட்றை குடையில்
நடந்து வருகிறேன் .
என் நிழலையும் இருட்டில் கரைத்து விட்டு.
நிலா வெளிச்சத்தில் உன் துணை
மட்டும்
போதும் என்று .

உன் நினைவுகளை எல்லாம் பூட்டி வைத்திருக்கும்
என் இதயத்தை திறக்கும் சாவி
உன் (இதழ்கள்) காதல் மட்டுமே .





Sunday, July 18, 2010

என்றும் என் நினைவோடு நீ

உன்னை பற்றிய எண்ணங்களை எல்லாம்
கவிதையாய் எழுதும் போது
மட்டும் என் கவிதை முற்று பெறாமல்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது ........


உனக்கும் என்னக்குமான இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்

அதிகரித்து கொண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து கொண்டே இருக்கிறேன் ........

நீ இல்லாத நேரத்து

என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன .

Sunday, February 14, 2010

நானும் அவனும்



ஃபிப் 14 அன்று காதலர் தினமாமே
அன்று என்ன ஸ்பெஷல்
என கேட்கிறார்கள் என் தோழிகள்
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்
என் காதலின் தினம் மார்ச் 17 என்று

கரும்பு தின்றதால் உதடு எறிகிறது என்கிறாய்
நான் கொடுக்கும் முத்தம் மட்டும்
இனிக்கிறது என்கிறாயே அது எப்படி!

மூச்சு விடவும் சிரமமாத்தான் இருக்கிறது
உன் சுவாசக் காற்று என் சுவாசமாய் மாறும் போழுது

உன் இதழ்களால் என் இதழ்களை தீண்டும் போது மட்டும்
என் இமைகள் மூடி திறக்கின்றன.

ஒரு நாளைக்கு எத்தனை முறை தான்
என் இமைகள் மூடி மூடி திறக்கும்
நீயே சொல்

நீ காதலோடு அனைத்தால்
மட்டுமல்ல
அடித்தாலும் சுகமே எனக்கு



Friday, January 22, 2010

இனிய பிறந்த நாள் நல் வாத்துக்கள்



அன்பு அண்ணன் நிஜாமா நல்லவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

Monday, January 11, 2010

டீலா நோ டீலா


ஒரே ஒரு முறை மட்டும் காதலிக்கிறேன் என்று சொல் என்றேன்
முடியாது என்றாய்.
ஒரே ஒரு முறை மட்டும் முத்தம் கொடு என்றேன்
முடியாது என்றாய்.
ஒரே ஒரு நாள் மட்டும் கனவில் வா என்றேன்
முடியாது என்றாய்.
ஒரே ஒரு நொடி மட்டும் உன் முகம் காட்டு என்றேன்
முடியாது என்றாய்
ஒரே ஒரு நொடி மட்டும் என்னுடன் பேசு என்றேன்
முடியாது என்றாய்.
அத்தைக்கு பிறந்த மகள் மெத்தை மீது அமர்ந்திருக்கிறாள்
கடைசியாக கேட்கிறேன் இப்பொழுதாவது சொல்
டீலா நோ டீலா