Sunday, February 8, 2009

இதயத்தை கடன் கொடு

அன்பாய் பழகும்
அன்னையிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வேதனைகளை..

உடன் பிறப்புகளாக
பழகும் தோழிகளிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வலிகளை..

ஆறுதல் தரும்
கவிதைகளில் கூட
சொல்ல முடியவில்லை
என் கண்ணீரை..

புரிந்தும் புரியாதது
போல் பார்க்கிறாய்
அனைத்தையும்
சொல்லும் உன்னிடம்
கூட சொல்ல முடியவில்லை
உனக்கான என் காதலை . .

காத்திரு..
கடவுளால்
நிச்சையிக்கப்பட்ட
பிப்ரவரி பதினான்கு
அன்று உனக்கான
என் இதயத்தை தருகிறேன்..

ஏற்க மனம் இருந்தால்
ஏற்று கொடுக்கிறேன்
இல்லையேல்
உன் இதயத்தை
எனக்கு கடன் கொடு..

அடுத்த வருடம்
திருப்பி தரும்போது
உன் இதயத்தை சேர்த்து
மூன்று இதயமாக தருகிறேன்.