Friday, April 3, 2009

கனவு தேசம்











எப்படியும் உள்ளே விடக்கூடாதென்று
இறுக என் கண்களை பூட்டிக்கொண்டு
தூங்க சென்றாலும்
கள்ள(ச்)சாவி போட்டு இரவை
ஆட்கொண்டு விடுகின்றன
உன் கனவுகள்
****************************************************
இதுவரை இல்லாத அதிசயமாய்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
என் இரவுகளை அலங்கரிக்கிறது
உன் கனவுகள்
நீ என்னுள் வந்ததனால்
******************************************************
இரவுக்கு அழகு நிலவு
நிலவுக்கு அழகு தனிமை
என் தனிமைக்கு அழகு உன் நினைவு
என் இரவுக்கு அழகு உன் கனவு
******************************************************
அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே
அப்படி என்றால் இப்பொழுது
நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன்
பிறந்திருக்க வேண்டும் .
*******************************************************
" செல்லமா "
"என்னடா "
"உனக்கு கனவெல்லாம் வருமா "
" ம்ம் வருமே நெறைய "
"அந்த கனவுல
நான் வருவானா ......?"
"ம்ம் ... வருவ "
" அப்ப உனக்கு
புடிச்ச கனவு சொல்லேன் ..."
"எனக்கு எல்லா கனவுமே
பிடிக்கும் டா ...."
" எல்லாம்னா ......?
" எல்லா கனவும் தான் "
" அப்ப நான் வராத கனவும் புடிக்குமா ...?
" அய்யோ மக்கு "
உன்னை தவிர என் கனவில் வேற
யாரையும் நான் அனுமதிப்பதில்லை அதனால
தான் என் எல்லா கனவும் எனக்கு புடிக்கும்னு சொன்னேட
அய்யோ வரமடி நீ எனக்கு
...............................................................................................................