Saturday, August 22, 2009

சொர்கத்திற்கு செல்ல



அந்தி மாலை நேரம்,
மல்லிகையின் மயக்கும் மணம்,
மன்னவனோடு நான்
சேர்ந்து நடக்க ,
என்னவனை சீண்டி விடும்
சில்லென தென்றல் காற்று,
தோள் மீது கை போட்டு
என்னை கட்டி அணைத்து..,
விரலோடு விரல் சேர்த்து ,
இதழோடு இதழ் சேர்த்து
கண்கள் மூடி காதல்
சொர்கத்திற்கு நாங்கள் செல்ல ,
ஒற்றை நிலவு மட்டும்
எங்களை ஏக்கத்தோடு
பார்த்து கொண்டு இருக்க ,
விண்மின்கள் அர்ச்சனை தூவ ,
நிலவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு
திரும்பினோம் மீண்டும் காதல்
சொர்கத்திற்கு செல்ல .