Thursday, June 18, 2009

உன்னோடு கலந்த என் காதல்



உன்னை பற்றிய ஆயிரம் ஆசைகள்

மனதில் சுமந்து கொண்டு

என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு

நொடியிலும் இந்தநொடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்

நாளைய விடியலிலாவது உன்

முகம் காண மாட்டேனா

என்ற ஏக்கங்களுடன் விழி மூடுகிறேன்

உனக்காய் காத்திருந்த நொடிகள்

வீண் போகாமல் மாமன் மகன்

நி வர

நீ என்னை கட்டி அணைத்ததில்

காற்றுக்கும் மூச்சி திணறல்

ஏற்பட்டு விட்டது .

குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்

உன்னையே எனக்கு

போர்வையாய் மாற்றினாய்

உன்னோடு நான் கொண்ட காதல்

நான் மண்ணோடு மறையும் வரை

என்னோடு கலந்திருக்க வேண்டும்