Saturday, February 21, 2009

எஸ் ஆர் நோ



நீங்க ஒரு லூசுன்னு உங்க குடும்பத்துல
இருகவங்களுக்கு தெர்யுமா தெரியாத ?
இதுக்கு பதில் நீங்க
எஸ் ஆர் நோ
மட்டும் தான் சொல்லனும் .
பின்குறிப்பு :இது எனக்கு வந்த குறுஞ்செய்தி

Friday, February 13, 2009

மாயக்கண்ணாடி

முகம் பார்க்க
செல்லும்போதெல்லாம்
இவள் உனக்கானவள் என
உன்னை பற்றி
கர்வமாய் நினைக்க
வைக்கும் என் வீட்டு
கண்ணாடியை ரொம்ப
பிடிக்கும் எனக்கு.
...........................................
கண்ணாடி எதிரில்
நிற்கும் பிம்பத்தை
மட்டுமே காட்டும்
என்று யார் சொன்னது?
என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே.
................................................
இப்போதெல்லாம்
பார்க்கவே முடிவதில்லை
என்றாலும்..
கண்மூடி திறக்கும்
நேரத்திற்குள் உன் பிம்பங்களை
கண்ணாடி போல
தெளிவாக கட்டிவிடுகிறது
என் காதல்.
.......................................

உங்கள் காதலின் ஆழத்தை கானா




இன்று காதலர் தினம். உலகமே காதல் நினைவுகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. புதிதாக காதலைச் சொல்பவர்கள் முதல் மனைவியுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுபவர்கள் வரை எல்லோரும் ஆனந்தக் கடலில் மூழ்கும் நாள் இன்று.இன்று மாலை நேரமானதும் கடற்கரை, பூங்கா, கோயில், திரையரங்கு என எல்லாமுமே காதலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.காதலைக் கொண்டாட ஒரு தினம் வேண்டுமா? இது காதலர்களுக்கு மட்டும்தான், இது மேற்கத்திய நடைமுறை நமக்கெதற்கு என்று காதலர் தினத்திற்கு எத்தனையோ எதிர்ப்புகள் உண்டு.இவையெல்லாம் வெறும் பசப்பல்கள்தான். உண்மையில் எல்லாவற்றிற்கும் ஒரு நாள் வேண்டும்தான். தினமும் சூரியன் உதிக்கத்தான் செய்கிறது, தமிழர் திருநாள் பொங்கல் அன்று மட்டும் சூரியனை நாம் கொண்டாடவில்லையா? அதற்கென்ன சூரியன் நம்மிடம் கோபித்தாக் கொள்கிறது?காதலர்களுக்கு மட்டும்தான் காதலர் தினம் என்பது எந்த வகையில் நியாயம்? திருமணமானவர்கள் அவர்களது துணையை காதலிப்பதில்லையா? அதுவும் காதல்தான். அவர்களுடனும் இந்த காதலர் தினத்தைக் கொண்டாடலாமே?இது மேற்கத்திய கலாச்சாரம் என்பது முற்றிலும் தவறு, நமது முந்தைய காலத்திலும் இந்திர விழா, மன்மத விழா, வில் விழா என்றெல்லாம் பல பெயர்களில் இந்த காதலர் தினம் கொண்டாடப்பட்டுள்ளதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே நமது கலாச்சாரத்தைக் கொண்டாடுங்களேன்.நீங்கள் விரும்பும் அல்லது காதலிக்கும் உங்கள் துணையை அது காதலர்/காதலியாகவோ அல்லது கணவன்/மனைவியாகவோக் கூட இருக்கலாம். அவர்களுடன் கொண்டாடுங்கள் காதலர் தினத்தை எந்த எதிர்மறையான கருத்தும் இன்றி. என்ன தயாராகிவிட்டீர்களா காதலர் தினத்திற்கு... அதற்கு முன் இந்த காதல் பரிசோதனையில் பங்கேற்பீர். இதில் நீங்கள் பெற விரும்பும் முத்தம், நீங்களும் உங்கள் துணையும் கொண்டிருக்கும் நெருக்கம், இவற்றிற்கெல்லாம் மேலாக உங்கள் காதலின் அளவைக் கூறும் லவ்மீட்டர் என அடுக்கி வைத்துள்ளது .இதனைப் பார்த்து உங்கள் காதலின் அளவை அறிந்து கொள்ளுங்கள். வாவ் என்று வாய்பிளக்கும் அளவிற்கு மதிப்பெண் வந்தால் உங்கள் காதலிக்கோ அல்லது காதலருக்கோ கூறி மகிழுங்கள். பாராட்டையும் பெறுங்கள்.இல்லையென்றால் பரவாயில்லை. தாமதிக்காதீர் அடுத்த ஆண்டுக்குள் காதல் அளவில் சதமடிக்கும் எண்ணத்துடன் கிளம்புங்கள் காதல் கொண்டாட்டத்தில் பங்கேற்க.
காதலர் தின வாழ்த்துகள்!
பின் குறிப்பு :
இதை நான் எழுதவில்லை .நான் படித்ததை உங்களுடன் பகிந்துகொள்கிறேன் .

Sunday, February 8, 2009

இதயத்தை கடன் கொடு

அன்பாய் பழகும்
அன்னையிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வேதனைகளை..

உடன் பிறப்புகளாக
பழகும் தோழிகளிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வலிகளை..

ஆறுதல் தரும்
கவிதைகளில் கூட
சொல்ல முடியவில்லை
என் கண்ணீரை..

புரிந்தும் புரியாதது
போல் பார்க்கிறாய்
அனைத்தையும்
சொல்லும் உன்னிடம்
கூட சொல்ல முடியவில்லை
உனக்கான என் காதலை . .

காத்திரு..
கடவுளால்
நிச்சையிக்கப்பட்ட
பிப்ரவரி பதினான்கு
அன்று உனக்கான
என் இதயத்தை தருகிறேன்..

ஏற்க மனம் இருந்தால்
ஏற்று கொடுக்கிறேன்
இல்லையேல்
உன் இதயத்தை
எனக்கு கடன் கொடு..

அடுத்த வருடம்
திருப்பி தரும்போது
உன் இதயத்தை சேர்த்து
மூன்று இதயமாக தருகிறேன்.


Saturday, February 7, 2009

காத்திருப்புகள்


உன் நினைவுகள்
என்னுடன் இருப்பின்
பிரிவுகள் நிரந்தரம்
அல்ல எனக்கு
நீ வேண்டாம் என்று
முற்று புள்ளி வைத்த
என் காதல்.
என்றாவது ஒரு நாள்
மீண்டும் சில
புள்ளிகள் வைத்து
தொடரும் என்ற நம்பிக்கையல்
காத்திருக்கிறேன் ......

Thursday, February 5, 2009

பிரிவு

உன்னை மறக்க நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன்னை தான் நினைக்கிறேன்
என்பதை மறந்து
விடுகிறது என் இதயம் .
நீ என் மீது
காட்டிய அன்பால்,
அன்பை நேசிக்க துவங்கினேன் .
நீ என் மீது
காட்டிய கோபத்தால்
கோபத்தை நேசிக்க துவங்கினேன்.
நேற்று நீ என்னை
விட்டு பிரிந்ததால்
இன்று நான்
பிரிவையும் நேசிப்பவளாய்
மாறிவிட்டேன்