Friday, September 6, 2013

கலையாத காதல்



என்னை இருக்க அனைத்து இம்சை செய்யும்
 உன் நினைவுகளின் பிடியிலிருந்து 
விலக முடியவில்லை என்னால்.
விடியாத இரவுகல் உனக்காய்
 செய்து வைத்து காத்து கொண்டிருக்கிறேன்.
கலையும் கனவு என்று தெரிந்தும் 
ஏகாந்தமாய் இரசித்து கொண்டிருக்கிறது 
என் இதயம்.
இதோ நீ என்னை விட்டு பிரிந்ததை 
முழுவதுமாக மறந்த என் இதயம்
 இன்னும் உன் நினைவுகளுடன்
கொஞ்ஞி விளையாடிக்கொண்டிருக்கிறது.
மீண்டும் என் காதல் சிறு குழ்ந்தையாய்
 உன் மடி சாய ஏக்குகிறது.
 உன் ஷ்பரிசத்தில் முழுவதுமாக 
நான் என்னை மறக்க வேண்டும்.
நான் நீயாய் மாறி ஒரே ஒரு நொடி மட்டும் 
என்னுல் வந்து வாழ்ந்து பார். 
உன் மீதான என் காதலின் அளவை 
நீயே புரிந்துகொள்வாய். 
என்னை எண்ணி கண்ணே மணியே கண்மணியே
 என்று கவி எழுத சொல்லவில்லை,
 உன் பெயரின் பின்னால் என் பெயரை
 ஒரே ஒரு முறை மட்டும் எழுதி விட்டு போ..
 என் காதல் சாகா வரம் பெற்ற சந்தோசத்தில் 
மூற்ச்சை ஆகட்டும்...