உன் கை பிடித்து கடற்கரை மணலில் நடக்க ஆசை
நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
Thursday, October 13, 2011
ஆசை
உன் கை பிடித்து கடற்கரை மணலில் நடக்க ஆசை
Sunday, August 21, 2011
சுகமான நினைவுகள்
Friday, July 22, 2011
விடை கொடுத்தாய் விடை பெறுகிறேன்
அனைத்தையும் மறக்கும் எனக்கு
உன்னை மறக்கும் வழி தெரியாமல் போனது
அனைத்திற்கும் விட்டு கொடுத்து போகும் எனக்கு
உன்னை விட்டு போக மனம் வர வில்லை .
சுற்றமும் வேண்டாம் , நட்பும் வேண்டாம் ,
அன்பும் வேண்டாம், காதலும் வேண்டாம் ,
நீ என் மீது காட்டிய அன்பில் மயங்கி
உன் மீது நான் கொண்ட காதலால்
இங்கு தினம் தினம் ஒவ்வொரு நொடியும்
இறந்து கொண்டிருக்கிறேன் .
கர்ப்பிணிகளுக்கு கூட இறந்த பிறகு தான்
சுமைதாங்கிகளை கட்டுவார்களாம் .
ஆனால் நானோ உயிருடன் இருக்கும் போதே
உன்னை என் மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன்
நானும் ஒரு சுமை தாங்கி தான் .
நீயே என்னை விட்டு போன பிறகு
நான் உன் மீது வைத்துள்ள என் காதலை
நிறம் மாறிய என் கண்களை பார்த்து
நீயே தெரிந்து கொள் .
மனம் கொண்ட சுமையை கண்ணீரால் கரைத்தாலும் .
நீ சொன்ன வார்த்தையை நினைக்கும் போதெல்லாம்
மீண்டும் தண்ணிரில் ஊறிய மரக்கதவை
கனக்கிறது என் இதயம் .
Saturday, February 12, 2011
போங்கு பையன் கிறுக்கு பொண்ணு
"டேய் போங்கு பையா"
" என்னடி கிறுக்கு புள்ள "
" நேத்து பஸ்ல ஒரு பொண்ண பாத்தேன்னு சொன்னியே ? "
" ஆமா அதுக்கு என்னடி இப்ப ?"
" அழக இருந்தலா.."
" ம் "
"ரொம்ப அழக இருந்தலா .."
".................."
" டேய் போங்கு உன்னைய தான் டா கேக்குறேன் "
"என்னைய விட ரொம்ப அழக இருந்தலா ..."
" ஏன் டி இப்படி அகராதி பண்ற..."
" அகராதின என்னடா போங்கு ..."
" சண்டை டீ "
" சண்டைனா என்னடா ......"
" எனக்கு தெரியாது என்னைய விட்டுடுடி "
" ம் ம் முடியாது நீ சொல்லி தான் ஆகனும் "
இனி உன் இதழ்களை பதில் சொல்லி அடைக்க முடியாது என
ஒரு நூறு முத்தத்தால் பூட்டி விட்டாயட.
"டேய் போங்கு பையா இத வந்த ஒடனே செஞ்சி இருந்தா
இன்னும் ரெண்டு மூணு நிமிஷம் கூடி இருக்கும்ல ..."
"அடி திருட்டு புள்ள உன்னைய ......................"
" ஹி ஹி போடா கிறுக்கு மச்சான் ....."