Wednesday, September 15, 2010

காற்றின் தழுவல்


காற்றிக்கும் காதுகள் உண்டு என்பதை
அன்று தான் கண்டு கொண்டேன்
மொட்டை மாடியில் நின்று
மூன்றாம் பிறையையும் அதற்கு துணையாய் இருந்த
நச்ச்திரத்தையும் உன் நினைவோடு
ரசித்து கொண்டு இருக்கும் போது
காற்றில் மூலம் நீ தூது அனுப்பிய செய்தியை .
தென்றல் வந்து என்னை தழுவி சொன்னது.
உன்னவனும் உன்னை இப்படி தான் தழுவ
எண்ணுகிறான் என்று .