Thursday, October 1, 2009

என்னை மறந்துவிடு


உயிரோடு நான் இருக்க
உணர்வோடு நீ கலந்தாய் .
தென்றலென என்னை தொட்டு சென்று.
சுறாவளியாய் என்னை விழ்த்தி விட்டாய் .
மறக்க வேண்டும் என்று
முடிவு செய்த பிறகு.
என்னை மறக்க வேண்டும் என்று
நினைத்து கொண்டே இருக்காதே .
என்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
நீ என்னை தான் நினைக்கிறாய்
என்னபதை மறந்துவிடாதே .
நீ என்னை மறந்து விட வேண்டும்
என்பதையே மறந்து விடு .
அப்பொழுது தான் நீ என்
நினைவுகளையாவது முழுவதுமாக மறப்பாய் .
தன் நிழலை தானே தாங்கும்
தஞ்சை கோபுரத்தை போல
உனக்கான என் காதலையும் ,
எனக்கான உன் காதலையும்
நானே சுமந்து கொள்கிறேன்
கடைசி வரை