நடக்கையிலே ஒரு
புதிய உலகை கண்டேன்
நீ கொடுத்த மல்லிகையில்
உன் வாசத்தை உணர்ந்தேன்
எதிரில் வருபவரையும்
ஒரு முறை நீ என
கற்பனை செய்தேன்
உன்னிடம் பேசும் போதெலாம்
இரவையும் தூங்க விடாமல்
என்னுடன் விழித்திருக்க வைத்தாய்
பகலில் உன்னிடம் பேசியதை
எல்லாம் நினைத்து தனியாக
சிரிக்கும் பைத்தியம் ஆக்கினாய்
ஏனோ இன்று என்னை வெறுக்கிறாய்
உன் மனதால் என்னை
பிடிக்கவில்லை என்று சொல்
என் நிழால் மட்டும் அல்ல
என் முச்சு காற்றும் உன்மீது படாதாபடி
எங்கயாவது போய் விடுகிறேன்
உன் நினைவுகளை மட்டுமாவது
சுமந்தபடி