Sunday, March 22, 2009

உன் நினைவுகளை சுமந்தபடி

என்னவனே உன் கை பிடித்து
நடக்கையிலே ஒரு
புதிய உலகை கண்டேன்
நீ கொடுத்த மல்லிகையில்
உன் வாசத்தை உணர்ந்தேன்
எதிரில் வருபவரையும்
ஒரு முறை நீ என
கற்பனை செய்தேன்
உன்னிடம் பேசும் போதெலாம்
இரவையும் தூங்க விடாமல்
என்னுடன் விழித்திருக்க வைத்தாய்
பகலில் உன்னிடம் பேசியதை
எல்லாம் நினைத்து தனியாக
சிரிக்கும் பைத்தியம் ஆக்கினாய்
ஏனோ இன்று என்னை வெறுக்கிறாய்
உன் மனதால் என்னை
பிடிக்கவில்லை என்று சொல்
என் நிழால் மட்டும் அல்ல
என் முச்சு காற்றும் உன்மீது படாதாபடி
எங்கயாவது போய் விடுகிறேன்
உன் நினைவுகளை மட்டுமாவது
சுமந்தபடி