Tuesday, December 23, 2008

காதல் காலங்கள்




மார்கழி மாத குளிரும் எனக்கு சித்திரையாய் சுடுகிறதடா

நீ எனை என்றோ கட்டி அனைத்து உன் மார்பில்

என் முகம் புதைந்த அந்த சூட்டினை நினைக்கும் போது



நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு

உதட்டுசாயம் இல்லாமல் என் உதட்டை சிவக்க வைக்க தெரியாத என்ன



Monday, December 22, 2008

இதயத்திருடன்




விழி அசைத்து சம்மதம் மட்டும் சொல்
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் என்கிறாய்
நானோ இமைகூட அசையாமல்
உன்னையே பார்த்து கொண்டு இருக்கிறேன்
காதலின் மொழி தெரியாத கள்வனா
என் இதயத்தை திருடியது என்று.

Saturday, December 20, 2008

தனிமை


இப்பொழுதெல்லாம் தனிமையை
அதிகமாக நேசிக்க துவங்கி விட்டேன்
உன் நினைவுகள் எனக்கு
துணையாய் இருப்பதனால் .
----------------------------------------------
நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .
-----------------------------------------------------

Friday, December 19, 2008

உனக்கென நான்..


வாழ்வது
ஒரு நொடியானாலும்..
உன் கன்னக்குழியில்..
இரசிப்பது
ஒரு நொடியானாலும்..
உன் புன்னகையை..
இருப்பது
ஒரு நொடியானாலும்..
உன் இதயத்தில்..

இறப்பதும்
ஒரு நொடி ..
ஒரு முறைதான்..
அதுவும்
உன் மடியாக
இருக்கட்டுமே.
..............................

Thursday, December 18, 2008

சுகமான சுமை


என் இதயம் கூடஒரு சுமை தாங்கி தான்
உன் நினைவை மட்டும் சுமப்பதால்
அந்த சுமையும் சுகமே
அதை நீ தந்ததால்.

ம்ம்ம்.. அழகுதான்..



அழகு
அழகு
அழகு..

உன் பெயர்.