உன்னை பற்றிய எண்ணங்களை எல்லாம்
கவிதையாய் எழுதும் போது
மட்டும் என் கவிதை முற்று பெறாமல்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது ........
உனக்கும் என்னக்குமான இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்
அதிகரித்து கொண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து கொண்டே இருக்கிறேன் ........
நீ இல்லாத நேரத்து
என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன .