Wednesday, January 15, 2014

எனது கைவரிசையில்

நண்பர்களே   இது எல்லாம்  நான்  போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு ,
நீங்க  எம்புட்டு  மார்க்  போடுவீங்க  நீங்க  போட்ற மார்கள தான்  நீங்க என் மேல எம்புட்டு  பாசம் வச்சிருக்கீங்கனு  பாக்கணும் .(பாஸ் மார்க் வாங்க  எப்படி எல்லாம் பில்டப்  பண்ண வேண்டி இருக்கு )


பொங்கல் கோலம் 







மாட்டு   பொங்கல் கோலம்




                                                 


எங்க வீட்டு மாடு பாருங்க கலர் கலரா இருக்கு :))))))))

Monday, January 13, 2014

காதல் பண்டிகை





பழயன  எரித்தலும் ,புதியன  புகுத்தலும்  
தான்  போகி  பண்டிகை என்கிறார்கள் ,
ஆனால்  என்னுள் இருக்கும் 
உன் பழைய நினைவுகளை அழித்தாலும், 
மீண்டும் புதிதாய் உன் நினைவுகளே  பிறக்கின்றதே ,
ஒரு வேலை இதான் காதல் பண்டிகையா ???  

 

தாய்,  தந்தை , உற்றார் உறவினர் கூடி நின்று  
பொங்கலோ பொங்கல் என்று வேண்டிக்கொண்டிருக்கும்  போது 
என்னுள் இருக்கும்  உன் நினைவுகள் மட்டும் 
காதலோ காதல் என்று  கேலி செய்கிறது 
.உன் நினைவு  குறும்புகளின்  அழிசாட்டியம்  
தாங்க முடியவில்லையடா என்னால் 

   
    
 கரும்பின்  இனிப்பை விட   சுவையாக  இருக்கிறதடா,
  நீ என் இதழோடு  இதழ் முத்தமிட்டு  
விட்டு சென்ற  உன் இதழின்  ஈரம் ,  
தின்ன தின்ன   திகட்டாத அருஞ்சுவையும்  கலந்த  
ஒரு சுவையடா உன் முத்தம் :)


Friday, September 6, 2013

கலையாத காதல்



என்னை இருக்க அனைத்து இம்சை செய்யும்
 உன் நினைவுகளின் பிடியிலிருந்து 
விலக முடியவில்லை என்னால்.
விடியாத இரவுகல் உனக்காய்
 செய்து வைத்து காத்து கொண்டிருக்கிறேன்.
கலையும் கனவு என்று தெரிந்தும் 
ஏகாந்தமாய் இரசித்து கொண்டிருக்கிறது 
என் இதயம்.
இதோ நீ என்னை விட்டு பிரிந்ததை 
முழுவதுமாக மறந்த என் இதயம்
 இன்னும் உன் நினைவுகளுடன்
கொஞ்ஞி விளையாடிக்கொண்டிருக்கிறது.
மீண்டும் என் காதல் சிறு குழ்ந்தையாய்
 உன் மடி சாய ஏக்குகிறது.
 உன் ஷ்பரிசத்தில் முழுவதுமாக 
நான் என்னை மறக்க வேண்டும்.
நான் நீயாய் மாறி ஒரே ஒரு நொடி மட்டும் 
என்னுல் வந்து வாழ்ந்து பார். 
உன் மீதான என் காதலின் அளவை 
நீயே புரிந்துகொள்வாய். 
என்னை எண்ணி கண்ணே மணியே கண்மணியே
 என்று கவி எழுத சொல்லவில்லை,
 உன் பெயரின் பின்னால் என் பெயரை
 ஒரே ஒரு முறை மட்டும் எழுதி விட்டு போ..
 என் காதல் சாகா வரம் பெற்ற சந்தோசத்தில் 
மூற்ச்சை ஆகட்டும்...

Wednesday, January 16, 2013

என் நினைவுகளில் நீ


உயிர் பிரிந்த உடலை போல‌ 
உன்னை பிரிந்து நான்....... 
வாசத்தை தொலைத்த பூக்களை போல‌ 
உன் நேசத்தை தொலைத்து நான்...... 
வண்ணம் இல்லாத வானவில் போல‌ 
என் எண்ணம் இல்லாத உன் உள்ளம்....... 
கனவுகள் இல்லாத தூக்கத்தை போல‌ 
உன் நினைவுகளில் இல்லாத என் காதல்......




Thursday, October 13, 2011

ஆசை


உன் கை பிடித்து கடற்கரை மணலில் நடக்க ஆசை
பேருந்து பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் உன் தோள் சாய ஆசை
முடிவில்லா சாலையில் உன்னுடன் பயணம் செய்ய ஆசை
நீ உண்ட மிச்சத்தை நான் உன்ன ஆசை
கொட்டும் மழையில் ஒற்றை குடையில் நாம் நடக்க ஆசை
யாரும் இல்ல ஆத்தங்கரையில் உன் மடி சாய ஆசை
உன் கனவுகள் என்னை தினமும் எழுப்ப ஆசை
உன் நினைவுகளுடனே கண் மூட ஆசை
எனக்குள் வரும் கண்ணீரை உன் விரல் துடைக்க ஆசை
என் கரத்தை நீ மட்டும் பிடிக்க ஆசை
காற்றுக்கு கூட இடைவெளி விடாமல் நீ என்னை கட்டி அணைக்க ஆசை
உதட்டு சாயம் இல்லாமை என் இதழ்களை நீ சிவக்க வைக்க ஆசை
தொலைபேசியில் நீ கொடுத்த முதல் முத்தத்தை போல் இன்னொரு முத்தம் பெற ஆசை
நீ வங்கி தரும் பூக்களில் உன் வாசம் வீச ஆசை
மழை வராமலே உன் அன்பில் நான் நினைய ஆசை
உன் காதலில் நான் கரைய ஆசை
அடுத்த ஜென்மத்தில் அல்ல இந்த ஜென்மத்திலே நாம் திருமணம் செய்து கொள்ள ஆசை
இதில் எதுவுல் நடக்காது என்று தெரிந்தும்
ஏதோ ஒரு ஆசையில் காத்து கொண்டு இருக்கிறேன்
இந்த ஜென்மத்தில் தப்பி தவறி இதில்
எதாவது ஒன்று நடக்காத என்ற ஏக்கத்தில்