Thursday, February 5, 2009

பிரிவு

உன்னை மறக்க நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன்னை தான் நினைக்கிறேன்
என்பதை மறந்து
விடுகிறது என் இதயம் .
நீ என் மீது
காட்டிய அன்பால்,
அன்பை நேசிக்க துவங்கினேன் .
நீ என் மீது
காட்டிய கோபத்தால்
கோபத்தை நேசிக்க துவங்கினேன்.
நேற்று நீ என்னை
விட்டு பிரிந்ததால்
இன்று நான்
பிரிவையும் நேசிப்பவளாய்
மாறிவிட்டேன்