Thursday, March 26, 2009

காதல் கிறுக்கன்

"செல்லம்மா.."
"ம்.."
"செல்லம்மா.. செல்லம்மா"
"என்னடா.."
"ஒண்ணுமில்ல..
சும்மா கூப்டலாம்னு தோனுச்சு ..
அதான் கூப்டேன்"
"ஏய்.. சனியண்டா நீ.."
"உங்க ஊர்ல பொண்ணுங்கல்லாம்
சனியனுங்களதான் காதலிப்பீங்களா.."
" கிறுக்கனாடா நீ.. "
"உன்ன மாதிரி கிறுக்கிய
காதலிச்சா கிறுக்கனாதானே
இருக்க முடியும்.."
"டேய்.. ஒழுங்கா பேசுடா..
எனக்கு கோபம் வருது.."
"எங்க ஊர்ல கோபம் வந்தா
கட்டிபுடிச்சு முத்தம் தருவாங்க.."
"ஹேய்ய்.. பொறுக்கி..
நீ அடங்கவே மாட்டியாடா.."
" அட.. சிறுக்கி..
நீதான் அடங்கவே விடமட்டேங்குறியே.."
"இதுக்கு மேல பேசுன..
மவனே நானே உன்ன கொன்னுடுவேன்டா.."
"உன்னால முடியாதுடி"
"ஏன்?"
"என்ன விட்டுட்டு
உன்னால இருக்க முடியாதுடி"
"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..
இதுக்கு மேல எதாவது பேசுன..
நெஜமாலுமே உன்ன கொன்னுடுவேன்டா.."
" அப்போ என்ன கொல்றதுக்கு முன்னாடி
ஒரு முத்தம் கொடுத்துட்டு என்னை
என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ.."
"சீ..போடா.."
" ஹையோ.. எவ்ளோ அழகா இருக்கு.."
"என்ன?"
" வேற ஒண்ணுமில்ல ..
உன்னோட 'சீ.. போடா'வை சொன்னேன்.."
" ஐயோ.. ஆண்டவா.."
"அட .. இதுவும் நல்லாத்தான் இருக்கு."
என்னோடு நீ செல்லமாக
மல்லுகட்டும் அழகிற்காகவே
உன்னை அடிக்கடி சீண்ட
தோன்றுகிறது எனக்கு.
டிஸ்கி : இது என் பிரண்டு லோகு எழுதுன கவிதை எப்படி இருக்கு (எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு அதன் இங்க போட்டேன் )