Friday, June 26, 2009

நானும் பெங்குவினும்

நானும் இந்த பெங்குவின் ஒன்று தான்
என்ன பார்கிறாய் .
அதற்க்கு இறக்கை இருந்தும்
பறக்க முடியாமல் தவிக்கிறது .
எனக்கு உன் மீது
ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்
எனக்கும் இந்த பறவைபோல் உன்னோடு
கை கோர்த்து கடற்கரை அலைகளில்
கால் நனைக்க ஆசை தான்
ஆனால் நீயோ
உன் வியர்வையை தவிர என் மீது வேறு ஏதும் படாதபடி பார்த்து கொள்கிறாய்

Thursday, June 25, 2009

இதுவும் காதல்

ஆபிஸ்ல எந்த வேலையும் இல்லாம சும்மா இருந்ததுல கொஞ்சம் வெருப்பாகவும், ரொம்ப மூட் அவுட்டாகவும் இருந்தேன். சரி என்ன பன்னலாமுன்னு யோசிச்சிகிட்டே இருக்கும் போது ப்லாக் ஒரு ரவுண்டு அடிக்கலாமுன்னுதோனிச்சி, பஷ்ட்டுக்கா என்ற ப்லாக்க ஓபிங் செஞ்சு பார்த்தேன்அதிலிருக்கும் ஒவ்வொரு லின்க்கா(லிம்கா இல்லீங்கோ)ஓபிங் செஞ்சி பாக்க சொல்ல ஒரு தலீப்பு கண்ல மாட்டிக்கிச்சிஆண்கள் பொல்லாதவர்களா - இது தாம்மே தலீப்புஇந்த தலீப்ப பாத்த வுட்னே படிக்காமலே(எப்பவும் அப்படித்தானே ...)கமெண்ட் போடலாமுன்னு நன்ச்சி, சரி எதுக்கும் பட்ச்சிருவமேன்னுபார்த்தா நமக்கு புச்ச ஒருத்தரோட போட்டா
போட்டுகிறாங்க

http://thulasidhalam.blogspot.com/2009/02/blog-post_04.html

இத படிச்சதுக்கு அப்பறம் இந்த பறவைக்கு இருக்க அன்பு, பாசம், காதல், ஏன் மனுசங்களுக்கு இல்லன்னு தோனுச்சி
உங்களுக்கு என்ன தோணுதோ அத சொல்லிட்டு போங்க

Thursday, June 18, 2009

உன்னோடு கலந்த என் காதல்



உன்னை பற்றிய ஆயிரம் ஆசைகள்

மனதில் சுமந்து கொண்டு

என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு

நொடியிலும் இந்தநொடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்

நாளைய விடியலிலாவது உன்

முகம் காண மாட்டேனா

என்ற ஏக்கங்களுடன் விழி மூடுகிறேன்

உனக்காய் காத்திருந்த நொடிகள்

வீண் போகாமல் மாமன் மகன்

நி வர

நீ என்னை கட்டி அணைத்ததில்

காற்றுக்கும் மூச்சி திணறல்

ஏற்பட்டு விட்டது .

குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்

உன்னையே எனக்கு

போர்வையாய் மாற்றினாய்

உன்னோடு நான் கொண்ட காதல்

நான் மண்ணோடு மறையும் வரை

என்னோடு கலந்திருக்க வேண்டும்

Tuesday, June 2, 2009

வேண்டுகிறேன்



குடை பிடித்தபடி
உன்னோடு சேர்ந்து பயணிக்க
மழை வர வேண்டுகிறேன்!

குடை இல்லாத‌ நேர‌த்து
ம‌ழையாய் நீயே வ‌ர‌ வேண்டும்
என்று வேண்டுகிறேன்!

மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக் கொண்டிருக்க
வெயிலடிக்க் வேண்டுகிறேன்!

கடலில் கால் நானைத்தபடி
உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க
அலையடிக்க் வேண்டுகிறேன்!

கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!

காதலித்தபடிஉன்னையே
க‌ண‌வ‌னாக‌ கைபிடிக்க‌
வேண்டுகிறேன்...

ஹைய் பா நான் ம‌றுப‌டியும் வ‌ந்துட்டேன் ஒகே
இனி எப்ப‌வும் போல‌ கும்மி அடிக்க‌லாம்:))))))))))