Monday, January 5, 2009

மௌன மொழி

எத்தனையோ நாட்கள்
கழித்து உன்னிடம்
எதை எதையோ
பேச வந்த உதடுகள்
உன்னை பார்த்ததும்
மௌனம் பழக
ஆரம்பித்து விட்டது..
நாள் முழுக்க பேசினாலும்
அர்த்த படாமல் பார்த்து
கொண்டு இருப்பதே
இதம் என்று அதற்கும்
தெரிந்து விட்டது போல ..
இமையும் எனக்கு சுமையே
உன்னை காணும்
போது இமைப்பதால் ..