Friday, January 30, 2009

நம் காதல்

கண்மணி..
இனி நீ சூடும் பூக்களெல்லாம்
பூக்களாக இருக்காது..
அது என் காதலாகத்தான் இருக்கும்..
ஆம்.. உலகத்தில் உள்ள
அத்தனை பூக்களிலும்
என் காதலை நிரப்பி வைக்க போகிறேன் ..
என்றேனும் நீ பூக்கள் சூட..
என் காதலோடு என் நெஞ்சமும்
நிறைந்து போகும்.
............................................
நமக்கான உலகத்தில்
உன்னை மட்டும்
வெளியே அனுப்பிவிட்டு
இருந்த ஒரு
வழியையும் இறுக
அடைத்துக்கொண்டு விட்டது
நம் காதல்..
இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..
உன் நினைவுகளின்
தூரலோடும் . .
வாழ்வதை தவிர
வேறென்ன செய்ய முடியும் நான்.
.....................................