Monday, May 18, 2009

நீயே வேண்டும் என்று வரம் கேட்பேன்



இறைவனிடம் போராடி மறுஜென்மம்
எடுத்து என்னை பெற்றெடுத்தாய்......
உன் இரத்தத்தையே எனக்கு உணவாக்கினாய்....

நான் உன் மார்பினில் எட்டி உதைக்கும் போதும்
பிஞ்சி பாதங்கள் என்று முத்தம் இட்டாய்.....
நான் நடை பழகும் போது கால் தடுமாறி
நான் கீழே விழ உன் மனம் பதறி...

என் கை பிடித்து நடை பழக கற்று கொடுத்தாய்
உன் ஆசைகளை துறந்து
என் சந்தோசங்களை நிறைவேற்றினாய்....
கண்கள் மோதலால் வந்த காதலால்
உனை மறந்து எண்ணவணை மணந்தேன்.....

உணை மறந்ததால் தான் என்னவோ
இன்று நூல் அறுந்த பட்டம் போல்
திசை தெறியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறேன்.....

இன்றும் என் கை பிடித்து
வாழ்கை பயணம் செய்ய
கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கிறாய்...

இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல
இனி என் எல்லா ஜென்மத்திலும்
நீயே என் தாயாக வேண்டும் என்று
இறைவனிடம் வரம் கேட்பேன்!!!!!!!