பழயன எரித்தலும் ,புதியன புகுத்தலும்
தான் போகி பண்டிகை என்கிறார்கள் ,
ஆனால் என்னுள் இருக்கும்
உன் பழைய நினைவுகளை அழித்தாலும்,
மீண்டும் புதிதாய் உன் நினைவுகளே பிறக்கின்றதே ,
ஒரு வேலை இதான் காதல் பண்டிகையா ???
தாய், தந்தை , உற்றார் உறவினர் கூடி நின்று
பொங்கலோ பொங்கல் என்று வேண்டிக்கொண்டிருக்கும் போது
என்னுள் இருக்கும் உன் நினைவுகள் மட்டும்
காதலோ காதல் என்று கேலி செய்கிறது
.உன் நினைவு குறும்புகளின் அழிசாட்டியம்
தாங்க முடியவில்லையடா என்னால்
கரும்பின் இனிப்பை விட சுவையாக இருக்கிறதடா,
நீ என் இதழோடு இதழ் முத்தமிட்டு
விட்டு சென்ற உன் இதழின் ஈரம் ,
தின்ன தின்ன திகட்டாத அருஞ்சுவையும் கலந்த
ஒரு சுவையடா உன் முத்தம் :)