Tuesday, April 28, 2009

இதழ் தொட்ட பட்டாம்பூச்சி

என்றும் பூக்களளையே சுற்றி வரும்
பட்டாம்பூச்சி ஏனோ இன்று
என்னவளையே சுற்றி வந்தது .
எந்தன் இந்த புரியாத பார்வைக்கு
இன்று பூமியில்புதிதாக பூத்த இந்த
பூவின் இதழிலிருந்து தேன் எடுக்காமல்
போக மாட்டேன் என்று என் எதிரிலேயே
என்னவளிடம் மல்லுகட்டுகிறது .
என்னவளின் வெட்கத்தை பார்த்தே
வண்ணத்து பூச்சிகளுக்கு வண்ணங்களை
பூசினான் அந்த இறைவன் .
என்னவளின் மென்மையான பரிசத்தை
பார்த்தே ரோஜாக்களை படைதான்
அந்த இறைவன் .
என்னவளின் கொடி இடை அழகை
பார்த்தே சிற்பியை படைத்தான்
என்னவளின் அன்பை பார்த்தே என்னை
படைத்தான் அவளிடம் ஆயுள்
கைதியை கணவனாக இருக்க .
என்னவனே நீ என்னிடம் உன் முதல்
காதலை சொல்ல வரும்போது
உன் இமைகளின் பட படப்பை
பார்த்து பட்டாம் பூச்சி பறக்கவும்
நீ என்னை விட்டு போன பிறகு
என் இதய துடிப்பை பார்த்து
மீன்கள் தரையில் துடிக்கவும்
கற்றுகொண்டதடா