Tuesday, June 2, 2009

வேண்டுகிறேன்



குடை பிடித்தபடி
உன்னோடு சேர்ந்து பயணிக்க
மழை வர வேண்டுகிறேன்!

குடை இல்லாத‌ நேர‌த்து
ம‌ழையாய் நீயே வ‌ர‌ வேண்டும்
என்று வேண்டுகிறேன்!

மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக் கொண்டிருக்க
வெயிலடிக்க் வேண்டுகிறேன்!

கடலில் கால் நானைத்தபடி
உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க
அலையடிக்க் வேண்டுகிறேன்!

கவிதை சொல்லியபடிஉன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!

காதலித்தபடிஉன்னையே
க‌ண‌வ‌னாக‌ கைபிடிக்க‌
வேண்டுகிறேன்...

ஹைய் பா நான் ம‌றுப‌டியும் வ‌ந்துட்டேன் ஒகே
இனி எப்ப‌வும் போல‌ கும்மி அடிக்க‌லாம்:))))))))))