Thursday, October 1, 2009

என்னை மறந்துவிடு


உயிரோடு நான் இருக்க
உணர்வோடு நீ கலந்தாய் .
தென்றலென என்னை தொட்டு சென்று.
சுறாவளியாய் என்னை விழ்த்தி விட்டாய் .
மறக்க வேண்டும் என்று
முடிவு செய்த பிறகு.
என்னை மறக்க வேண்டும் என்று
நினைத்து கொண்டே இருக்காதே .
என்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
நீ என்னை தான் நினைக்கிறாய்
என்னபதை மறந்துவிடாதே .
நீ என்னை மறந்து விட வேண்டும்
என்பதையே மறந்து விடு .
அப்பொழுது தான் நீ என்
நினைவுகளையாவது முழுவதுமாக மறப்பாய் .
தன் நிழலை தானே தாங்கும்
தஞ்சை கோபுரத்தை போல
உனக்கான என் காதலையும் ,
எனக்கான உன் காதலையும்
நானே சுமந்து கொள்கிறேன்
கடைசி வரை

37 comments:

aankal pollaathavarkalaa said...

நீ என்னை மறந்து விட வேண்டும்
என்பதையே மறந்து விடு .
அப்பொழுது தான் நீ என்
நினைவுகளையாவது முழுவதுமாக மறப்பாய் ..

பிரியாத பிரியம் சிலர் பிரியும் போது புரியும்

ப்ரியமுடன்... ***
ந.ரமேஷ்... ***

கார்க்கிபவா said...

:((

ஒரே சோகாச்சிய்யா இருக்கே

Anonymous said...

அசத்திட்ட காயத்திரி இப்பத் தான் தெரியுது நீ பிரிவையும் நேசிப்பவள் உன்னை பிரிபவரையும் நேசிப்பவள் இதை விட அழகா ஒரு பிரிவை சொல்லவே முடியாது...வாழ்த்துக்கள் தேர்வில் பெற்றதுக்கும் என் அன்பு முத்தங்கள் என் செல்லத்துக்கு...

Admin said...

//நீ என்னை மறந்து விட வேண்டும்
என்பதையே மறந்து விடு .
அப்பொழுது தான் நீ என்
நினைவுகளையாவது முழுவதுமாக மறப்பாய் .//


நல்ல வரிகள்... அருமையான கவிதை

S.A. நவாஸுதீன் said...

நீ என்னை மறந்து விட வேண்டும் என்பதையே மறந்து விடு .அப்பொழுது தான் நீ என் நினைவுகளையாவது முழுவதுமாக மறப்பாய்.

*************************************

ரொம்ப டாப்பா இருக்கு காயு.

S.A. நவாஸுதீன் said...

உனக்கான என் காதலையும் , எனக்கான உன் காதலையும் நானே சுமந்து கொள்கிறேன் கடைசி வரை

*************************************

அழுத்தமான வரிகள். பிரிவையும் நேசிப்பது புரியாமலில்லை

Rajakamal said...

வேணா... வேணா.... அழுதிருவேன்.

நேசமித்ரன் said...

அருமை! ஆனால் வார்த்தைகளில் கொஞ்சம் சிக்கனம் வேண்டும் என்று தோன்றுகிறது . சொல்வதில் பிழை எனில் பொறுக்க ...

அப்துல்மாலிக் said...

பிரியாத மனம் வேண்டும்
பிரிவையையும் தாங்கும் மனம் வேண்டும்

வரிகள் அனைத்தும் மனதைவிட்டு பிரியாமல் இருக்கு

சத்ரியன் said...

//தன் நிழலை தானே தாங்கும்
தஞ்சை கோபுரத்தை போல
உனக்கான என் காதலையும் ,
எனக்கான உன் காதலையும் //

காயு,

எனக்குத்தெரிந்து இதுவரை யாரும் தொடாத ஒப்பீடு.//தன் நிழலை தானே தாங்கும் தஞ்சை கோபுரத்தை போல//

ம்ம்ம்ம். ஜொளிக்கத் தொடங்கிவிட்டது, கவிதைகள். தொடரட்டும்!

அரங்கப்பெருமாள் said...

உண்மையாகவே பிரிவை நேசிக்கிறீர்களே... கலக்கல் போங்க...

// தஞ்சைக் கோயிலைப் பற்றிய உவமைப் பற்றி....(இப்படி ஒரு பேச்சு உண்டு தெரியுமா?)

கோயில் கட்டும் பணி முடிவுறும் சமயத்தில்,அப்பணியை பார்வையிட வந்த ராஜராஜ மன்னர்,இதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து... இது விழாதே எனக் கேட்ட பொழுது அதற்கு கூறப்பட்ட பதில் என்ன தெரியுமா? " இதன் நிழல் கூடக் கீழே விழாது"

gayathri said...

aankal pollaathavarkalaa said...
நீ என்னை மறந்து விட வேண்டும்
என்பதையே மறந்து விடு .
அப்பொழுது தான் நீ என்
நினைவுகளையாவது முழுவதுமாக மறப்பாய் ..

பிரியாத பிரியம் சிலர் பிரியும் போது புரியும்

ப்ரியமுடன்... ***
ந.ரமேஷ்... ***


oru silarku appavum puriyathu

gayathri said...

கார்க்கி said...
:((

ஒரே சோகாச்சிய்யா இருக்கே


ada rompa naal kalichi vanthu irukenga
narniga karki
sogamlem illa summa

gayathri said...

சந்ரு said...
//நீ என்னை மறந்து விட வேண்டும்
என்பதையே மறந்து விடு .
அப்பொழுது தான் நீ என்
நினைவுகளையாவது முழுவதுமாக மறப்பாய் .//


நல்ல வரிகள்... அருமையான கவிதை


nanringa சந்ரு

gayathri said...

தமிழரசி said...
அசத்திட்ட காயத்திரி இப்பத் தான் தெரியுது நீ பிரிவையும் நேசிப்பவள் உன்னை பிரிபவரையும் நேசிப்பவள் இதை விட அழகா ஒரு பிரிவை சொல்லவே முடியாது...வாழ்த்துக்கள்

nanri da chellam
தேர்வில் பெற்றதுக்கும் என் அன்பு முத்தங்கள் என் செல்லத்துக்கு...

ethanai muthamnu sollave illaye

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
நீ என்னை மறந்து விட வேண்டும் என்பதையே மறந்து விடு .அப்பொழுது தான் நீ என் நினைவுகளையாவது முழுவதுமாக மறப்பாய்.

*************************************

ரொம்ப டாப்பா இருக்கு காயு.

rompa santhoam anna neenga rasichathukku

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
உனக்கான என் காதலையும் , எனக்கான உன் காதலையும் நானே சுமந்து கொள்கிறேன் கடைசி வரை

*************************************

அழுத்தமான வரிகள். பிரிவையும் நேசிப்பது புரியாமலில்லை

mmmm anna sonna sari than

gayathri said...

Rajakamal said...
வேணா... வேணா.... அழுதிருவேன்.


ada first time varum pothey ungala aza vachitana

sari next time vanga santhosama ponga ok

gayathri said...

நேசமித்ரன் said...
அருமை! ஆனால் வார்த்தைகளில் கொஞ்சம் சிக்கனம் வேண்டும் என்று தோன்றுகிறது . சொல்வதில் பிழை எனில் பொறுக்க ...

nanringa நேசமித்ரன்

next kavithai chinatha ezuthuren ok

neenga ethu venumnalum sollalam ok

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
பிரியாத மனம் வேண்டும்
பிரிவையையும் தாங்கும் மனம் வேண்டும்

ungalukuma

வரிகள் அனைத்தும் மனதைவிட்டு பிரியாமல் இருக்கு

ithu than eanku vendum

gayathri said...

சத்ரியன் said...
//தன் நிழலை தானே தாங்கும்
தஞ்சை கோபுரத்தை போல
உனக்கான என் காதலையும் ,
எனக்கான உன் காதலையும் //

காயு,

எனக்குத்தெரிந்து இதுவரை யாரும் தொடாத ஒப்பீடு.//தன் நிழலை தானே தாங்கும் தஞ்சை கோபுரத்தை போல//

ம்ம்ம்ம். ஜொளிக்கத் தொடங்கிவிட்டது, கவிதைகள். தொடரட்டும்!

mmmmm nanringa சத்ரியன்

gayathri said...

அரங்கப்பெருமாள் said...
உண்மையாகவே பிரிவை நேசிக்கிறீர்களே... கலக்கல் போங்க...

nanringa அரங்கப்பெருமாள்

// தஞ்சைக் கோயிலைப் பற்றிய உவமைப் பற்றி....(இப்படி ஒரு பேச்சு உண்டு தெரியுமா?)

mmm therium

கோயில் கட்டும் பணி முடிவுறும் சமயத்தில்,அப்பணியை பார்வையிட வந்த ராஜராஜ மன்னர்,இதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து... இது விழாதே எனக் கேட்ட பொழுது அதற்கு கூறப்பட்ட பதில் என்ன தெரியுமா? " இதன் நிழல் கூடக் கீழே விழாது"

enaku ivalavu perusa theriyathu

but thanjai kopurathoda nizal kiza vizathunu mattum therium
:))))

rose said...

தஞ்சை கோபுரத்தை போல உனக்கான என் காதலையும் , எனக்கான உன் காதலையும் நானே சுமந்து கொள்கிறேன் கடைசி வரை
\\
superda gayu

SUFFIX said...

//தன் நிழலை தானே தாங்கும் தஞ்சை கோபுரத்தை போல உனக்கான என் காதலையும் , எனக்கான உன் காதலையும் நானே சுமந்து கொள்கிறேன் கடைசி வரை//

இனிய காதலின் சுமைதாங்கி!! ரசித்த வரிகள். கவிதை நல்லா இருக்குமா.

அன்பரசன் said...

//என்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
நீ என்னை தான் நினைக்கிறாய்
என்னபதை மறந்துவிடாதே//

வரிகள் அருமை

*இயற்கை ராஜி* said...

alugachi alugachiya varuthe...:-( paesama naanum oru alugachi kavithai eluthidalama?

நசரேயன் said...

// எனக்கான உன் காதலையும்
நானே சுமந்து கொள்கிறேன் கடைசி வரை //

தஞ்சாவூர் கோவில் முன்னாலையா?

R.Gopi said...

//என்னை மறக்க வேண்டும் என்று
நினைத்து கொண்டே இருக்காதே .
என்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
நீ என்னை தான் நினைக்கிறாய்
என்னபதை மறந்துவிடாதே .
நீ என்னை மறந்து விட வேண்டும்
என்பதையே மறந்து விடு .//

ஆஹா... த‌மிழ் விளையாடுகிற‌தே காய‌த்ரி... ம‌ற‌க்க‌ என்ற‌ வார்த்தையை இனி நான் வாழ்நாளில் ம‌ற‌க்க‌ வாய்ப்பில்லை...

//தன் நிழலை தானே தாங்கும்
தஞ்சை கோபுரத்தை போல
உனக்கான என் காதலையும் ,
எனக்கான உன் காதலையும்
நானே சுமந்து கொள்கிறேன்
கடைசி வரை //

பிர‌மாத‌ம்... ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு...க‌ல‌க்க‌ல்.... இப்ப‌டி என்ன‌ சொன்னாலும் அர்த்தம் என்னவோ, மிக‌ மிக‌ ந‌ன்றாக‌ எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து என்ப‌து தான்..

வாழ்த்துக்க‌ள் காய‌த்ரி....

gayathri said...

rose said...
தஞ்சை கோபுரத்தை போல உனக்கான என் காதலையும் , எனக்கான உன் காதலையும் நானே சுமந்து கொள்கிறேன் கடைசி வரை
\\
superda gayu


nanri rose rompa naal kalichi vanthu irukenga

gayathri said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
//தன் நிழலை தானே தாங்கும் தஞ்சை கோபுரத்தை போல உனக்கான என் காதலையும் , எனக்கான உன் காதலையும் நானே சுமந்து கொள்கிறேன் கடைசி வரை//

இனிய காதலின் சுமைதாங்கி!! ரசித்த வரிகள். கவிதை நல்லா இருக்குமா.

nanringa anna

gayathri said...

அன்பரசன் said...
//என்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
நீ என்னை தான் நினைக்கிறாய்
என்னபதை மறந்துவிடாதே//

வரிகள் அருமை


nanringa அன்பரசன்

gayathri said...

இய‌ற்கை said...
alugachi alugachiya varuthe...:-(

ada ithukelam azalama innum evalavo iurku

paesama naanum oru alugachi kavithai eluthidalama?

eaan nalla thane irunthenga

gayathri said...

நசரேயன் said...
// எனக்கான உன் காதலையும்
நானே சுமந்து கொள்கிறேன் கடைசி வரை //

தஞ்சாவூர் கோவில் முன்னாலையா?


mmmm anga sumantha than anga kopurathukkum therium en kadhal eppadi pattathu enru

gayathri said...

R.Gopi said...
//என்னை மறக்க வேண்டும் என்று
நினைத்து கொண்டே இருக்காதே .
என்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
நீ என்னை தான் நினைக்கிறாய்
என்னபதை மறந்துவிடாதே .
நீ என்னை மறந்து விட வேண்டும்
என்பதையே மறந்து விடு .//

ஆஹா... த‌மிழ் விளையாடுகிற‌தே காய‌த்ரி... ம‌ற‌க்க‌ என்ற‌ வார்த்தையை இனி நான் வாழ்நாளில் ம‌ற‌க்க‌ வாய்ப்பில்லை...

marakka matttenu solli iurkenga so maranthutadinga

//தன் நிழலை தானே தாங்கும்
தஞ்சை கோபுரத்தை போல
உனக்கான என் காதலையும் ,
எனக்கான உன் காதலையும்
நானே சுமந்து கொள்கிறேன்
கடைசி வரை //

பிர‌மாத‌ம்... ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு...க‌ல‌க்க‌ல்.... இப்ப‌டி என்ன‌ சொன்னாலும் அர்த்தம் என்னவோ, மிக‌ மிக‌ ந‌ன்றாக‌ எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து என்ப‌து தான்..

வாழ்த்துக்க‌ள் காய‌த்ரி....

nanringa gopi

Anonymous said...

நான் உன்னை போ போ
என்று சொல்லுவது
நீ என்னைவிட்டு போகவேண்டும்
என்பதற்க்காக அல்ல
என் இதயத்தினுள் போ போ
என்பதற்க்காக

என்னை மறக்க சொல்லுவது
ஒரே அடியாக மறந்துவிடுவதற்கு
அல்ல மறுபடியும் என்னை
நினைக்க செய்வதற்காக

உன்னை நேசிக்க
நான் யோசிப்பது இல்லை
நான் யோசிப்பதே
எவ்வாறு எல்லாம் உன்னை
நேசிக்கலாம் என்பதற்காகத்தான்

உன்னை பார்க்காமலிருப்பது
தவிர்க்க வேண்டும் என்பதற்கல்ல
எப்போதும் உன் நினைவாலே
தவித்துகிடக்க வேண்டும் என்பதற்குத்தான்

கடைசியாக ஒன்று
என்னை காதலிக்கவேண்டம்
எண சொல்லுவது எதற்குதெரியுமா
உனக்கும் சேர்த்து நானே
காதலித்து கொள்கிறேன் என்பதற்க்காகதான்

அடலேறு said...

என்னுடைய மறக்க வேண்டும் கவிதைக்கு அப்படியே பொருந்திப்போகிறது. நல்ல வீச்சு எழுத்துக்களில்.

ரோகிணிசிவா said...

"தன் நிழலை தானே தாங்கும்
தஞ்சை கோபுரத்தை போல
உனக்கான என் காதலையும் ,
எனக்கான உன் காதலையும்
நானே சுமந்து கொள்கிறேன்
கடைசி வரை "-
காதல் ,பிரிவு ,வலி,அவர்/அவள் மேல் உள்ள பாசம் -கலக்கீட்டிங்க !