Friday, July 22, 2011

விடை கொடுத்தாய் விடை பெறுகிறேன்


அனைத்தையும் மறக்கும் எனக்கு
உன்னை மறக்கும் வழி தெரியாமல் போனது
அனைத்திற்கும் விட்டு கொடுத்து போகும் எனக்கு
உன்னை விட்டு போக மனம் வர வில்லை .

சுற்றமும் வேண்டாம் , நட்பும் வேண்டாம் ,
அன்பும் வேண்டாம், காதலும் வேண்டாம் ,

நீ என் மீது காட்டிய அன்பில் மயங்கி
உன் மீது நான் கொண்ட காதலால்
இங்கு தினம் தினம் ஒவ்வொரு நொடியும்
இறந்து கொண்டிருக்கிறேன் .

கர்ப்பிணிகளுக்கு கூட இறந்த பிறகு தான்
சுமைதாங்கிகளை கட்டுவார்களாம் .
ஆனால் நானோ உயிருடன் இருக்கும் போதே
உன்னை என் மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன்
நானும் ஒரு சுமை தாங்கி தான் .

நீயே என்னை விட்டு போன பிறகு
நான் உன் மீது வைத்துள்ள என் காதலை
நிறம் மாறிய என் கண்களை பார்த்து
நீயே தெரிந்து கொள் .

மனம் கொண்ட சுமையை கண்ணீரால் கரைத்தாலும் .
நீ சொன்ன வார்த்தையை நினைக்கும் போதெல்லாம்
மீண்டும் தண்ணிரில் ஊறிய மரக்கதவை
கனக்கிறது என் இதயம் .

11 comments:

நட்புடன் ஜமால் said...

என்னதான் ஆச்சி :(

Annam said...

enna peelingsu overra iruku sari illa

மாணவன் said...

இது உண்மையா?? இல்ல கற்பனைக்காகவா?? :(
don't feelings...
இதுவும் கடந்துபோகும்...

Anonymous said...

ஆழ்மனதின் எண்ணங்கள் கவிதையாய்..

தலைப்பு அழகு

logu.. said...

Nice one..nallarukku.

சோகமான பாதையில் இனிய காதல் பயணம் said...
This comment has been removed by the author.
சோகமான பாதையில் இனிய காதல் பயணம் said...
This comment has been removed by the author.
எவனோ ஒருவன் said...

ஒவ்வொரு வரியும் வலிக்கிறது :-(

சித்தாரா மகேஷ். said...

//அனைத்தையும் மறக்கும் எனக்கு
உன்னை மறக்கும் வழி தெரியாமல் போனது//

உண்மை நேசங்களை மறப்பது கடினம்தான்.

சித்தாரா மகேஷ். said...
This comment has been removed by the author.
ரிஷபன் said...

சோகம் கூட சுவாரசியமான வரிகளாய்..